எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : மும்பை அணியை வீழ்த்தி ஐ.பி.எல் முதல் பிளே ஆப் போட்டியில் வெற்றி பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
முதலில் பேட் செய்த புனே அணி மனோஜ் திவாரி தோனி ஆகியோரது அபாரமான ஆட்டத்தினால் 162 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது. இதனையடுத்து மும்பை அணிக்கு இன்னொரு பிளே ஆப் வாய்ப்பு உள்ளது. அதில் வென்றால் மீண்டும் புனே அணியை இறுதியில் சந்திக்கலாம். கடைசி 2 ஓவர்களில் தோனி அதிரடியினால் 41 ரன்களை விளாசியது புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், இதுவே மும்பை தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
நடுவர் பிழையால் ரோஹித் சர்மா அவுட்
கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து ஸ்பின் பந்து வீச்சில் ஆட்டமிழப்பது வாடிக்கையாகியுள்ளது. ஆனால் ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று லெந்த்தை தவறாகக் கணித்து ஸ்வீப் ஆடினார், ஆனால் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு சென்றது. புனே அணி, வாஷிங்டன் சுந்தர் அப்பீல் செய்ய நடுவர் கையை உயர்த்தினார், தவறான தீர்ப்பு மும்பையின் தோல்விக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் மிகையாகாது.
ஆனால், பார்த்திவ் படேல் அருமையாக ஆடி வந்த போது, ஸ்கோரும் இலக்கை எட்டுவதற்கு இணங்கவே சென்று கொண்டிருந்த போது இத்தகைய தருணத்தில் ரோஹித் சர்மாவின் ஷாட் தேர்வு கடும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆனால் பொதுவாகவே ஐபிஎல் கிரிக்கெட்டில் சில ஷாட் தேர்வுகள், சில மோசமான பந்துவீச்சுகள், சில மோசமான களவியூகங்கள் பற்றி சந்தேகங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இம்முறை இன்சைடு எட்ஜில் ரோஹித் சர்மா அவுட் கொடுக்கப்பட்டாலும், அந்தத் தருணத்தில் அத்தகைய ஷாட் தேர்வு ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ரோஹித்திற்கு நடுவரின் மோசமான தீர்ப்பினால் இவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் அம்பாத்தி ராயுடு ரன் எடுக்காமல் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இன்னொரு முக்கியத் திருப்பமாக வாஷிங்டன் சுந்தர், கெய்ரன் பொலார்டை வீழ்த்தினார். அதன் பிறகு மும்பையின் வாய்ப்பு பற்றி பேச ஒன்றுமில்லை. 162 ரன்களை புனே அணி மிகவும் சவுகரியமாகவே வெற்றியாக மாற்றிக் கொண்டது என்றே கூற வேண்டும்.
குட் லெந்த்தையும் தாண்டிய ஃபுல் லெந்த் பந்துகளை ஸ்டம்புக்கு நேராக வீசிய வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சு பிட்சின் மந்தமான தன்மையினால் ஆடுவதற்கு மேலும் கடினமாக அமைந்தது. மேலும் அவர் பந்துகள் சற்றே வேகம் கூடுதலாக அமைந்ததால் பேட்ஸ்மென்கள் தூக்கி அடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் 4 ஓவர்களில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
ரஹானே, திவாரி, தோனி அபாரம்
மும்பையினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட புனே அணிக்கு வழக்கமான தொடக்கம் கிடைக்கவில்லை. ராகுல் திரிபாதி ரன் எடுக்காமல் பிளிக் ஆட முயன்று மெக்லெனகன் பந்தில் பவுல்டு ஆனார். மலிங்கா பந்தில் முன் விளிம்பில் பட ஹர்திக் பாண்டியா கேட்ச் பிடிக்க 1 ரன்னில் வெளியேறினார் ஸ்மித். அதன் பிறகு ரன் வருவது மிகவும் கடினமாக அமைந்தது. 10 பந்துகளில் 3 ரன்கள் என்று புனே அணி திணறியது. ஆனால் ரஹானே, திவாரி விக்கெட்டுகளை விடாமல் பொறுப்புடன் நிதானமாகவும் அதே வேளையில் பந்தை அடிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அடித்தும் ஆடினர். கரண் சர்மா, குருணால் பாண்டியாவை அடிப்பது மிகக் கடினமாக அமைந்தது.
ரஹானே திணறினாலும் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுக்க, திவாரியும், ரஹானேயும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 80 ரன்களைச் சேர்த்த போது ரஹானே கரண் சர்மாவிடம் எல்.பி. ஆகி வெளியேறினார். 12.4 ஓவர்களில் 89/3 என்று இருந்தது. அதன் பிறகு தோனி இறங்கினார். முதலில் ஒரு அபாரமான சிக்சரை அடித்தார், ஆனால் அதன் பிறகு ரன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. 18 ஓவர்கள் முடிவில் 121/3 என்று இருந்தது.
19-வது ஓவரில் மெக்லெனகன் பந்துகளை மனோஜ் திவாரி, தோனி பதம் பார்த்தனர், முதலில் பீமர் நோ-பால் பவுண்டரி ஆனது. இது திவாரியின் அரைசதமாகவும் அமைந்தது. பிறகு நேராக ஒரு சிக்சர். சிங்கிள் எடுத்து தோனியிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுக்க தோனி கிரீசிற்குள் நன்றாக உள்ளே நின்ற படி மிட்விக்கெட் மீது ஒரே தூக்கு தூக்கினார் பந்து சிக்ஸ். அதன் பிறகு 2 வைடுகள், பிறகு கடைசி பந்தில் தோனி மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க இந்த ஓவரில் 26 ரன்கள் விளாசல். 3 ஓவர்களில் 20 ரன்கள் என்றிருந்த மெக்லனகன் கடைசியில் 4 ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
20-வது ஓவரில் பும்ரா வீச தோனி பும்ராவுக்கு எதிராக தன் முதல் சிக்சரை விளாசினார். மீண்டும் நேராக ஒரு சிக்ஸ். கடைசி பந்தில் திவாரி ரன் அவுட் ஆனார். கடைசி 2 ஓவர்களில் 41 ரன்கள் வர புனே அணி 162 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி 48 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 58 ரன்களை எடுக்க, தோனி 26 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இந்தப் பிட்சில் அது தடுக்கக் கூடிய ஸ்கோர் அல்ல என்றாலும் புனே அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் லெண்டில் சிம்மன்ஸ் 5 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பார்த்திவ் படேல் அற்புதமாக ஆடினார். முதலில் வாஷிங்டன் சுந்தரை மிட்விக்கெட்டில் சிக்ஸ் தூக்கினார். உனட்கட் வீசிய மார்புயர பவுன்சரை டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ் அடித்தார். பெர்குசனை லெக் திசையில் அடித்த சிக்ஸ் ஆடம் கில்கிறிஸ்டின் துல்லியத்தை நினைவூட்டியது. பார்த்திவ் படேல் 40 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து 7-வது விக்கெட்டாக ஸ்கோர் 103 ஆக இருந்த போது வெளியேறினார். மெக்லெனகன், குருணால் பாண்டியாவை தாக்குர் வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்களில் வெளியேறினார். கடைசியில் பும்ரா 11 ரன்கள் எடுக்க மலிங்கா 7 ரன்கள் எடுக்க 20 ஒவர்களில் 142/9 என்று மும்பை முடிந்தது. ஆட்ட நாயகன் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், தாக்குர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 18 hours ago |
ஸ்வீட் பால்.5 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 23 hours ago |
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்