எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிப்புத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை இங்கே காண்போம்...!
உலகில் இறைவன் படைத்துள்ள 84 லட்சம் பிறவிகளுள் மிக உயர்ந்த பிறவி மானுடப்பிறவி. அதனால் தான் ஔவையார் அரிது அரிது மானிடராதல் அரிது என்றார். மனிதர்களாகிய நாம் மனதை உடையவர்கள். மனம் சிந்திக்கும் கருவி. இறைவன் கொடுத்துள்ள ஒவ்வொரு உறுப்பும் நமக்குப் பயன்படுமாறு படைத்துள்ளான். கைகளால் எல்லாகாரியங்களையும் செய்கிறோம். கால்களால் நடக்கிறோம். காதுகளால் கேட்கிறோம். கண்களால் பார்க்கிறோம். அப்பர் சுவாமிகள் ஒவ்வொரு உறுப்பையும் நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
இதுநாள் வரை பொன், பொருள் போகத்திற்காக அற்ப மனிதர்களையும் சிறு தெய்வங்களையும் வணங்கி வந்ததை விடுத்து, பிறப்பும் இறப்பும் இல்லாத அந்தப் பரம் பொருளை தலையாலே இறைவனாரின் திருஉருவையே மனதில் இருத்திப் பழக வேண்டும். வேண்டாச் செய்திகளையும், வெட்டிப் பேச்சுகளையும் காதால் கேட்காமல் புகழ்நாமம் செவிகேட்ப என்ற சம்பந்தப் பெருமானின் அருள்வாக்கின்படி இறைவனுடைய புகழையே கேட்டுப் பழகினால் மனம் ஒருநிலைப்படும்.
தேவையில்லாததையெல்லாம் நினைத்துப் பழகிய நம் நெஞ்சத்தை இறைவனுடைய திருப்புகழை மட்டுமே நினைக்குமாறு பழக்கினால் இறைவன் எப்படி, நினைப்பவர் மனத்தையே கோயிலாகக் கொண்டு குடிபுகுவான் என்று அப்பர் சுவாமிகள் அருள்கிறார். நமது உறுப்புகளை மட்டுமல்ல, நமது உடலுக்கு உள்ளே உள்ள சிறுநீரகம், இதய வால்வுகள் போன்றவற்றையும் இரண்டு இரண்டாக நமக்கு அருளியுள்ள இறைவனின் பெருங்கருணையை நினைத்துப் பார்க்க வேண்டும். இரண்டு உறுப்புகளில் ஒன்று பழுதாகி வேலை செய்யவில்லை என்றாலும் மற்ற உறுப்பின் துணை கொண்டு நம் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த வாய்ப்பளித்துள்ளான் இறைவன், இந்த இரண்டு உறுப்புகளும் ஒரே வேலையைத் தான் செய்கின்றன.
ஆனால் மனிதனுக்கு ஒரே வாயை மட்டுமே படைத்தான். அது மட்டுமல்ல. மற்ற இரண்டு இரண்டு உறுப்புகள் எல்லாம் ஒரே வேலையைத் தான் செய்கின்றன. சிறுநீரகங்கள், இதய வால்வுகள் எல்லாவற்றுக்கும் ஒரே வேலையை வைத்தான் இறைவன். ஒரே வாய்கொண்டு உணவு உண்ணவும், பேசவும் வைத்தான் இறைவன். எல்லா உயிர்களும் வாயினால் உண்ணும் வேலையை செய்கின்றன. ஒரு கூடைத் தவிடு, ஒருகட்டுப்புல் உண்ணும் அகன்ற பெரிய வாயையுடைய மாட்டை வாயில்லாப் பிராணி என்கிறோம். அதிகத்தீனி உண்ணுகின்ற யானையும் வாய் இல்லாப் பிராணிதானே. ஆனால் உண்பதால் மட்டுமே வாயை, வாய் என்று பெரியோர் கூறுவதில்லை. பேச வேண்டியவைகளைப் பேசுகின்ற வாயே வாய் என்றார்கள்.
வடிவேலன் தன்னை பேசா வாயென்ன வாயே, வள்ளி மணாளனைப் பேசாவாயென்ன வாயே என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளைவர்கள் கூறுகிறார்.
இறைவனுடைய பெருங்கருணையை இடையறாது நினைத்தால் அவ்வாறு ஆழமாக நினைக்கும்போது கருங்கல்லைப் போன்ற நம் மனம் தஞ்சத்து அருள்பரிவான் என்றார் அருணகிரி நாத சுவாமிகள். கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும் நலம் என்று ஆமாறும் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன் என்று கூறுகின்றார் மாணிக்க வாசக சுவாமிகள் இறைவனுடைய கருணை ஆயிரம் ஆயிரம் வகையாக நமக்கு அமைந்திருக்கிறது. இறைவன் தாயினும் சாலக் கருணை புரிகின்றான். பெற்ற தாய் இப்பிறவிக்கு மட்டும் உரியவள் இறைவன் பிறவிகள் தோறும் நமக்கு தாயாக விளங்குகிறான். தொடர்ந்து நின்ற தாயானை என்கிறார் அப்பர் சுவாமிகள்.
இந்த உடம்பை அருமையிலும் அருமையாகப் படைத்து இந்த உடம்புக்குள் எத்தனை எத்தனை வகையான நுண்ணிய கருவிகளையும் படைத்து உடம்பை இயக்க வைக்கிறான். நாம் தாய் வயிற்றில் இருந்த போதே இறைவன் நமக்கு உணவு தந்துள்ளான். பிறந்த பின்னர் குழுந்தைக்குத் தாய் பால் ஊட்டுகின்றாள். கருவில் உள்ள பிள்ளைக்கு அவளால் உணவு தர இயலாது. கருப்பைக்குள் முட்டைக்கும், கல்லுக்குள் தேரைக்கும் விருப்போடு உணவளிக்கும் ஈசன் என்கின்றார் ஔவையார். கருவில் உள்ள குழந்தைக்கு இறைவன் உணவு ஊட்டுவதால் தான் அது பிறந்த உடன் கருப்பாக காட்டு மலம் கழிக்கின்றது. மேலும் அக்குழந்தை பிறக்கும் முன்பாக தாய்க்கு இரு மார்புகளிலும் பால்சுரக்க அருள்புரிகின்றான் இறைவன்.
ஞான சூரியனாக விளங்கிய அருணகிரி நாதசுவாமிகள் முருகனிடம் ஒருவரம் கேட்கின்றார். முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்றருள்வாய் என்கிறார். எனவே நாம் இறைவனுடன் இரண்டறக் கலந்து இடையறாத பேரின்பத்தைப் பெறுவதற்கு இறைவனுடைய திருவருளை நினைத்து உள்ளம் உருகி நிற்பதே சிறந்த வழியாகும்.
டாக்டர் கே.பி.முத்துசாமி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத