எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. விடா முயற்சி வெற்றிக்கு வித்திடும் வழிகள் ஆகும். வாழ்வில் சுவையை கூட்டுவதும் இந்த முயற்சிகள்தான். தளர்ச்சியில்லா முயற்சியே ஒரு பயிற்சி தான். தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் ஏந்த வேண்டும். நம் செயலில் முயற்சியிருந்தால் தோல்விகள் நம்மை அண்டாது. எறும்பின் உழைப்பில் முயற்சி இருக்கிறது. ‘தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்’ என்பது வள்ளுவன் வாக்கு. குறளின் குரல். நம் திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும், வேண்டியதற்கு மேலும் அள்ளித் தரும். முயற்சிக்கு உதாரண புருஷர்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளார்கள். அவரவர் செயலில் முயன்று வென்றதால் தான் அவர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள்.
முயற்சியில் வெற்றி கிடைக்க மூன்று விஷயங்களில் நாம் சரியாக இருக்க வேண்டும். 1. நம்முடைய நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும். 2. நம் முயற்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும். 3. எல்லோரும் முயலும் பொதுவான வழியாக நம் வழியும் இல்லாமல், சற்று அறிவு நலனும் கெட்டிக்காரத்தனமும் கொண்டதாக நம் வழி இருக்க வேண்டும்.
தொடக்க நிலை இடையூறுகள் என்பது எந்தத் துறையில் புதிய முயற்சியில் ஈடுபடுகிறவர்களுக்கும் இயற்கையாக ஏற்படுகிற ஒன்று. ஒரே தாவலில் முதல் படியிலிருந்து பத்தாவது படியை தாண்ட முடியுமா? ஓவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும். சாதாரண தரையில் நடக்கும் போதே கால் இடறுவதும் எங்காவது கல்லில் கால் விரல் இடித்துக் கொள்வதும் சகஜம். படியேறும் போது கால் வலியும், மூச்சு இறைப்பும் ஏற்படுத்துவதும் சகஜம். இதே போல் புதிய துறையில் ஈடுபடும் போது ஏற்படும் இடையூறுகள், சிக்கல்கள் எல்லோருக்கும் பொதுவானவை. இதைப் புரிந்து கொள்ளாமல் தொடக்க நிலை இடையூறுகளைக் கண்டே பின்வாங்கி விடக்கூடாது. பிரச்சினைகளை நாம் தான் வெல்ல வேண்டுமே தவிர நம்மை பிரச்சினை வென்று விடக்கூடாது. மனிதர்கள் இரண்டு கால்களாலும் நடக்கிறார்கள். இதை இயற்கை ஒரே நாளில் அளித்துவிட்டதா? குழந்தை குப்புறக் கவிழ்ந்து, பின் தவழ்ந்து, கைகளை ஊன்றி எழுந்து உட்கார்ந்து, நாளடைவில் எழுந்து நின்று, சுவரைப் பிடித்துக் கொண்டு நடக்கப் பழகி, பின்னரே தன் சொந்தக் கால்களால் நிற்கிறது; நடக்கிறது; ஓடுகிறது. இதுபோலவே தான், ஒவ்வொருவரும் தனது லட்சியப் பயணத்தில் அடி எடுத்து வைக்கும்போது ஒவ்வொரு அடியாகத்தான் முன்னோக்கி நடக்க வேண்டும். அடுத்த அடி எடுத்து வைக்கும் அவசரத்தில், சறுக்கி விழுந்து, கீழ்ப்படிக்கே மீண்டும் போய்விடக்கூடாது.
இன்னும் சிலர் உண்டு. எந்த ஒரு புதிய துறையில் இறங்குவது சம்பந்தமாக யோசனை கேட்டாலும், “அது சரி வராது” என்று கூறி, நமது தன்னம்பிக்கையைக் குலைத்து விடுவார்கள். உண்மையில் அவர்களுக்கு, அந்தத் துறையைப் பற்றி ஏதாவது தெரியுமா என்றால், எதுவும் தெரியாது. வாத்தியார் வேலை பார்க்கிறவரிடம் வேறு எந்தத் தொழிலையும் பற்றி ஏதாவது அனுபவம் இருக்குமா? இருக்காது. ஆனால் அவரிடம் மளிகைக்கடை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்; என் யோசனைசரிதானா? என்று கேட்டுப் பாருங்கள்; “அதெல்லாம் சரி வராது; கடைத் தெருவில் ஏற்கனவே ஏழெட்டு மளிகைக்கடை இருக்கிறது. அதுவே காத்தடிக்கிறது. வியாபாரமே இல்லை. மேலும் கடைத் தெருவில் வாடகைக்கு கடை பிடிக்க வேண்டுமானால் ஐந்து லட்சம் பகடி கேட்பான். அப்புறம் இடத்துக்கு அட்வான்ஸ், கடை வாடகை, கரண்ட் சார்ஜ், அப்புறம் மளிகை சரக்கு வாங்கப் பணம்; வேலைக்கு ஆட்கள் வைக்க வேண்டும்; அவர்களுக்கு சம்பளம் தர வேண்டும் இப்படியெல்லாம் முதல் போட வேண்டும். போட்ட முதலை எடுக்கவே ஐந்து வருடம் ஆகிவிடும். இப்படித்தான் கணேஷ் ஸ்டோர் மளிகைக்கடையில் வேலை பார்த்த பையன், தனியாகப் போய் சின்ன கடைத் தெருவில் கடை போட்டான். செம ‘லாஸ்’ பிறகு கடையை மூடிவிட்டு, கோயமுத்தூரில் முட்டைக்கடை வைத்திருக்கிறானாம்” என்று ஒரு பெரிய கதாகாலட்சேபமே நடத்தி விடுவார்.
ஜவுளிக்கடை வைத்து நன்றாக சம்பாதிக்கும் ஒருவரை அணுகி நானும் ஜவுளிக்கடை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். என்று யோசனை கேட்டுப் பாருங்கள். தன் தொழிலுக்கு போட்டியாக வேறொருவர் வருவதை எந்த ஒரு வணிகரும் விரும்பமாட்டார். இது மனித இயல்பு. அதன்படியே இவரும், “எனய்யா நான் மாட்டிக்கொண்டு தவிப்பது போதாதா? இதுவரைக்கும் பத்து லட்ச ரூபாயை இந்த தொழிலில் நஷ்டமடைந்து விட்டேன். வெளியிலே வரவேண்டிய பாக்கியே நான்கு லட்ச ரூபாய்க்கு நிற்கிறது. போன மாசம், கடை சிப்பந்திகளுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லாமல் என் பொண்டாட்டி நகையை அடகு வைத்து சம்பளம் கொடுத்தேன் என்றால் பார்த்துக் கொள்ளேன்” என்பார். உண்மையில் அவர் தனது ஜவுளிக்கடை தொழில் மூலம் ஒகோ என்று சம்பாதிக்காவிட்டாலும், ஏதோ லாபகரமாகத்தான் தொழில் நடத்திக் கொண்டிருப்பார். கடை தொடங்கும் போது பத்தாயிரம் ரூபாய் சரக்கு இருந்த அவரது கடையில் இப்போது ஐந்து லட்ச ரூபாய்க்கு சரக்கு இருக்கும். பேங்கில் பணம் மனைவிக்கு நகை என்றும் சம்பாதித்து வைத்திருப்பார். ஆனால் ‘பஞ்சப்பாட்டு’ பாடி தன் தொழிலுக்கு வருகிறவரை வர விடாமல் செய்துவிடுவார்.
அத்தோடு போயிற்றா? பட்டுக்கோட்டைக்கு வழி என்னடா என்று கேட்டால் கொட்டைப் பாக்கு காசுக்கு ரெண்டு என்று சொன்ன கதையாக ஆகாத ஊருக்கு போகாத வழி காட்டுவார். “எவர்சில்வர் பாத்திரக்கடையை எனக்குத் தெரிந்து ஒரு லட்ச ரூபாய் முதல் போட்டு பாத்திரக்கடை வைத்தான் குருசாமி. இன்று மூன்று மாடி வீடு கட்டிவிட்டான். கார் வாங்கி விட்டான். பெரிய பையனை அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்கு அனுப்பப் போகிறானாம். செஞ்சா அதுமாதிரி தொழில் செய்யனும். சும்மா ஜவுளிக்கடையில் பனியன் ஜட்டி விற்று என்னத்தை லாபம் பார்க்கிறது. கடை வாடகை கொடுக்கவே வருமானம் போதாது” என்று கூறி தன்னிடம் ஜவுளித் தொழிலுக்கு யோசனை கேட்டவனுக்கு எவர்சில்வர் தொழிலுக்கு வழி சொல்லுவார்.
கேட்பவன் மன உறுதி இல்லாதவனாகவோ, அல்லது தனக்கு யோசனை சொல்லும் நபர் நல்லவர் என்று நம்புகிறவனாகவோ இருந்தால், அவர் சொல்படியே எவர்சில்வர் பாத்திரத் தொழில் செய்யும் யோசனைக்கு மாறி விடுவான். எனவே, உங்களுக்கு அனுபவம் உள்ள தொழிலோ, ஆர்வம் உள்ள தொழிலோ இரண்டில் ஒன்றில் ஈடுபடுங்கள். அதில் தான் உங்கள் மனம் ஒன்றும் அதில் தங்கு தடைகள் ஏற்பட்டாலும் மனம் சலித்துக்கொள்ளாது. தொடர்ந்து முயன்று வெற்றிகாணும். எனவே ஆர்வமற்ற துறையில், வெறும் ஆசையை மட்டும் அடித்தளமாகக் கொண்டு முயன்று, தோல்வி கண்டுவிட்டால், பிறகு உங்கள் மனம் புதிய முயற்சி எதிலும் இறங்கவே பயப்படும். புதிய மனிதர்களைக் கண்டாலும், இவர்கள் நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்று அச்சம் கொள்ளும். ஆனால் ஆர்;வமுள்ள துறையில் ஈடுபடும்போது, மனம் தோல்வி கண்டாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்;; முந்தைய தோல்விகளால் பாடம் கற்றுக் கொண்டு புதிய முறையில் முயற்சிகளை மேற்கொள்ளும். நாம் ஓரிடத்திற்குப் போக விரும்பி நடந்தோ, வாகனத்திலோ போகிறோம். குறுக்குப்பாதை என்று நினைத்து ஏதோ ஒரு தெரு வழியாகப் போகிறோம். ஆனால் உண்மையில் அது நாம் போக வேண்டிய இடத்திற்குப் போகாமல் வேறு இடத்திற்குப் போகும் பாதை, உடனே என்ன செய்கிறோம்? வீட்டுக்குத் திரும்பி வந்து விடுகிறோமா? அல்ல. திரும்பி வந்து சரியான பாதையைக் கண்டறிந்து அதில் பயணிக்கிறோம். காரணம், நாம் போய்ச் சேர வேண்டிய இடம் எது என்ற இலக்கு முடிவாகிவிட்டது. போகும் பாதை தான் நமக்குத் தேவை. அதுபோல் வெற்றியாளர்களுக்கு வெற்றி இலக்கு என்ன என்பதை அவரவர் உள்மனம் உணர்த்தி விடும். அதைச் சென்றடைய முதலில் சென்ற முயற்சி பாதை தவறாக இருந்தாலும் அவர்கள் சோர்ந்து விடுவதில்லை. முயற்சியைக் கைவிட்டு திரும்பிய இடத்துக்கே வந்து விடுவதில்லை. பாதையை மாற்றிக் கொள்வது போல் முயற்சியை மாற்றிக் கொண்டு தங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர்வார்களே தவிர, சோர்ந்து விடுவதில்லை.
தனது அதீதமான அறிவுக் கூர்மையாலும், கெட்டிக்காரத்தனத்தாலும் இவர் தங்கள் பாதையிலிருந்து தடம் புரண்டு விடக்கூடும். ஒழுக்கக் குறைவு, தவறான நோக்கம், கெட்டவர் சேர்க்கை போன்றவற்றால் வழி தவறிப்போய் வாழ்க்கையில் படுதோல்விப் பள்ளத்திற்குள் விழுந்து விடுவர். இப்படி பலர் பரிதாபப் பள்ளத்தாக்கில் விழுந்து அழிந்ததையும் நாம் படித்துமிருக்கிறோம். பார்த்துமிருக்கிறோம். எனவே, அடிப்படையில் ஆரோக்கிய மனம் உள்ளவர்களை, கெட்ட சகவாசம் கிட்டே அணுகாது. அணுகி, முயற்சித்து, இவர்களின் பணத்தால் தாங்கள் இன்பம் அனுபவிக்கலாம். ஆதாயம் அடையாளம் என்று கணக்கிட்டுக் கொண்டு வருபவர்கள் கூட, இவர்களது ஒழுக்கமான வாழ்க்கை முறையைக் கண்டு இவர்களால் தங்களுக்குப் பயன் ஏற்படாது என்று விலகிச் சென்று விடுவர். எனவே, எதற்கும் விட்டுக் கொடுக்காத பண்பு நலன் தான் நம் முயற்சிகளுக்கு உந்து சக்தியாக விளங்குகிறது. ‘இது என்னால் முடியாது; அதற்கான சாமர்த்தியம் எனக்குப் போதாது’ என்று எண்ணாதீர்கள்; சொல்லாதீர்கள். உங்களுக்கு எவ்வளவு குறைவான சாமர்த்தியம் இருந்த போதிலும், அந்த முறையான அளவிற்கான சாமர்த்தியத்திற்கு உரிய வெற்றியை அடையவாவது உங்களுக்குத் தகுதி இருக்கிறது என்பது உண்மையல்லவா?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
தமிழ்நாடு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
05 Feb 2025சென்னை: 2025-26-ம் ஆண்டுக்கான தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது
-
அதிபர் டிரம்பின் புதிய உத்தரவால் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த ஈரான் கரன்சி மதிப்பு
05 Feb 2025தெஹ்ரான் : அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
-
தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்தது: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
05 Feb 2025சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டு ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
ஐ.சி.சி. டி-20 தரவரிசை: அபிஷேக் சர்மா முன்னேற்றம்
05 Feb 2025துபாய் : ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2026 தி.மு.க. வெற்றிக்கான முன்னோட்டம் வாக்கு செலுத்திய பிறகு சந்திரகுமார் பேட்டி
05 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை : ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
05 Feb 2025சென்னை : பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஒ.பன்னீர் செல்வம் தி.மு.க.
-
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இங்கி. அணிகள் நாக்பூரில் இன்று மோதல்
05 Feb 2025நாக்பூர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.
சுற்றுப்பயணம்...
-
ஊதிய ஓப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, பிப்.
-
நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள்: த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைவர் விஜய் முக்கிய உத்தரவு
05 Feb 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.&nb
-
'விடாமுயற்சி’ சிறப்புக்காட்சிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி
05 Feb 2025சென்னை : அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
-
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி
05 Feb 2025விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
-
3 பணியாளர்கள் தற்காலிக நீக்கம்: சாம்சங் தொழிற்சாலையில் உள்ளியிருப்பு போராட்டம்
05 Feb 2025காஞ்சிபுரம் : சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவியது
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் அதிகரிப்பு
05 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் 10 .41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
-
வாழப்பாடி ராமமூர்த்திக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு ஐ.என்.டி.யூ.சி. வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்திக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு ஐ.என்.டி.யு.சி கோரிக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள்
-
ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
05 Feb 2025டெல்லி : அலுவலக மின்னணு சாதனங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
-
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
05 Feb 2025திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர், சிக்கந்தர் தர்காவிற்கு பக்தர்கள் செல்ல அனுதி அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
05 Feb 2025அமிர்தசரஸ் : சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்.
-
எச்-1பி, எல்-1 விசா வைத்திருக்கும் அமெரிக்க இந்தியர்களுக்கு சிக்கல்
05 Feb 2025அமெரிக்கா : எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர
-
தன்னை கொல்ல சதி நடந்தால்.... ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
05 Feb 2025வாஷிங்டன் : டிரம்பை கொலை செய்வதற்கு ஈரான் நாட்டில் சதி திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வந்ததையடுத்து அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் 26-ம் தேதி வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
05 Feb 2025சென்னை, வருகிற 10-ம் தேதிக்குள் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் வருகிற 26-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அண்ணா தொழிற்சங்கம்&n
-
உ.பி. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி
05 Feb 2025லக்னோ: உ.பி. மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
-
வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலாப்பயணி பலி
05 Feb 2025கோவை: வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.