எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்த நாளாக விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படு கிறது. விநாயகர் முழு முதற்கடவுளாகவும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை உடனே நிறைவேற்றும் எளிமையானவராக கருதப்படுகிறார். மஞ்சள்பொடி, வெல்லம், களிமண், வெள்ளெருக்கவேர், சந்தனம் மற்றும் சாணம் முதலானவற்றில் கூட விநா யகரை உருவாக்கி பூஜைகள் செய்து விடலாம். விநாயகரை வழிபடுவது மிகவும் சுலபமானதும் அவரை திருப்திப்படுத்துவதும் மிகவும் எளிதானதாகும். தேடி வந்து வழிபட்டால் ஓடிவந்து வினைகள் தீர்ப்பார் விநாயகப் பெருமான். விநாயகரை இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, சீனா, நேபாளம், கிரேக்கம், எகிப்து, கயா, ஜாவா மற்றும் பர்மா போன்ற நாடுகளிலும் இந்திய மக்களால் வழிபாடு நடத்தப் படுகிறது.
ஒரு முறை பார்வதிதேவி குளிக்கச் செல்லும் முன் தன்னுடைய அழுக்கை ஒன்று திரட்டி ஒரு சிறுவனை படைத்து, அவனை காவலுக்கு நிறுத்தி வைத்து ஒருவரையும் உள்ளே அனுமதிக்காதே! என்று கட்டளையிட்டு குளிக்கச் சென்றா ராம். அதுசமயம் சிவபெருமான் வர, அவரை அச்சிறுவன் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டான். இருவருக்கும் சண்டை ஏற்பட்டு இறுதியில் சிவபெருமான் அச்சிறு வனின் தலையை துண்டித்து விட்டாராம். அந்த சமயம் அங்கு வந்த பார்வதிதேவி மிகவும் வருத்தமடைந்தார். தன்னிலிருந்து உருவான அச்சிறுவன் தன்னுடைய குழந்தை போன்றவன் என்று கூற, உடனே சிவபெருமான் அதற்கு வருந்தி அச்சிறுவனுக்கு உயிர் கொடுக்க முன்வந்தார். உடனே தனது பூத கணங்களை அழைத்து அச்சிறுவனின் தலையை தேட ஆணையிட்டார். ஆனால் அச்சிறுவனின் தலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே வடக்கு திசை நோக்கி உறங்கிக் கொண்டிருக்கும் பாலகனின் தலையை கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார். ஆனால் அந்த பாலகனின் தாய் வேறு திசை நோக்கி உறங்கியிருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஆனால் பூத கணங்கள் எங்கு தேடியும் வடக்கு திசை நோக்கி யாரும் உறங்கவில்லை. ஆனால் ஒரு சிறு யானை மட்டும் வடக்கு திசை நோக்கி உறங் கிக் கொண்டிருந்தது. அதன் தாய் வேறு திசை நோக்கி உறங்கியது. இதனைக் கண்ட பூத கணங்கள் அந்த யானையின் தலையை வெட்டி சிவபெருமானிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். உடனே சிவபெருமான் அச்சிறுவனின் உடலின் மீது பொருத்தி மந்திரங்கள் ஜெபித்து உயிர் கொடுத்தார். அவ்வாறாக அச்சிறுவன் விநாயகராக பெயர் கொண்டான்.
விநாயகர் சதுர்த்தியன்று பூஜையறையில் ஒரு பலகையை வைத்து அதன் மீது கோல மிட்டு, அதன் மீது தலை வாழை இலையினை விரித்து, அதன் மேல் பச்சரியை பரப்பி, அதன் நடுவில் விநாயகரை வைப்பார்கள். விநாயகருக்கு வண்ணக்குடை அணிவித்து, எருக்கம்பூ மாலை அணிவிப்பர். அருகம்புல், மல்லி, அரளி போன்ற மலர்களைத் தூவி அர்ச்சனை செய்வர். விநாயகருக்கு விருப்பமான கொலுக்கட்டை, பொரி, அவல், சுண்டல், அப்பம், கரும்பு, கொய்யா போன்ற உண வுப் பொருட்கள் படைத்து வணங்குவர்.
விநாயகருக்கு அருகில் ஒரு சொம்பு வைத்து, அதில் மாவிலை, தேங்காய், பூ போன்றவற்றை கொண்டு கும்பம் வைப்பார்கள். பிறகு விநாயகருக்கு படையலிட்டு வணங்குவார்கள். அவருடைய மூல மந்திரத்தை 51 முறை சொல்லி வழிபடுவார்கள். அன்று முழுவதும் பகலில் விரதம் இருந்து மாலையில் சந்திரனைப் பார்த்துவிட்டு விநாயகரை வணங்குவார்கள். அப்படி செய்தால் தான் விரதம் முழுமையடையும்.
விநாயகரை மூன்று நாட்கள் வீட்டில் வைத்து வழிபட்டு பின் கடலில் சென்று கரைத்து விடுவர். இந்தியா முழுவதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. அகத்தியர், மகாமுனி காவேரி நதியைத் தன் கமண்டலத்தில் அடைத்து வைத்த போது, விநாயகப் பெருமான் மக்களுக்கு பயன்பட வேண்டிய நீரை கமண்டலத்தில் அடைத்து வைத்துள்ளதை கவனித்தார். அது சமயம் அகத்தியர் மகாமுனி கமண்டலத்தை கீழே வைத்துவிட்டு மாலைக்கடன்களை முடிக்கச் சென்ற போது, விநாயகர் அங்கே அந்தணச் சிறுவனாக தோன்றி கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார். அப்போது காவேரி தரணி எங்கும் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. அதைப் பார்த்த அகத்தியருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அடைத்து வைத்த காவேரியை அச்சிறுவன் பூமியில் ஓடவிட்டு விட்டானே என்று கோபமுற்று, அச்சிறு வனை அடிக்கத் துரத்தினர். அகத்தியருக்கு அகப்படாமல் போக்கு காட்டி ஓடி விட்டு, பின்பு மாட்டிக் கொண்டான். அப்போது அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்ட முற்பட்டபோது, அவன் உடனே விநாயகனாக உருமாறினார். பின்பு அகத்தி யர் தன் தலையிலேயே கொட்டிக் கொண்டார். குட்ட நினைத்து தன் தலையிலேயே குட்டிக் கொண்டு மன்னிப்பும் கோருகிறார். மக்களின் பயனுக்கு உள்ள காவேரியை இப்படி கமண்டலத்தில் அடைத்து வைக்கலாமா என்று விநாயகர் வினவ, அகத்தியரும் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கோரினார்.
முன்பு ஒரு சமயம் திரிபுரர்கள் என்றழைக்கப்பட்ட மூன்று அசுரர்கள் கடும் தவம் புரிந்து பறக்கும் தன்மை கொண்ட மூன்று கோட்டைகளைப் பெற்று, தவவழிமையால் கிடைத்த அபூர்வ சக்தியால் மனச்செருக்குற்று, தேவர்களை துன்புறுத்தத் தொடங்கினர். அதுசமயம் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவபெருமான் அந்த அசுரர்களை அழிக்க மனமுவந்தார். அப்போது நான்கு வேதங்களும் புரவிகள் ஆக, சூரிய சந்திரர்கள், சக்கரங்கள் ஆக, நான்முகன் சாரதியாக, அனைத்து தேவர்களும் போர் கருவிகளாக, சிவபெருமான் திருத்தேரில் போருக்கு தயாரானார். சிவபெருமான் கட்டளைக்கு இணங்க நான்முகன் தேரை செலுத்த முற்பட்டபோது தேர் சக்கரங்களின் அச்சு முறிந்து போர் பயணம் தடைபட்டது. சிவபெருமான் புன்முறுவலுடன் விநாயகரை வணங்காமல் போருக்கு புறப்பட்ட காரணத்தை நான்முகனுக்கு உணர்த்தினார். உடனே தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விநாயகரை வணங்கி துதி பாடினர். திரிபுர சம்ஹாரம் விக்கினமின்றி நிகழ ஆசி வேண்டி நின்றனர். தன்னை வேண்டி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அருள்புரியும் விநாயகப் பெருமான் அவர்களுக்கும் தயவு கூர்ந்து ஆசி வழங்கினார்.
விநாயகருக்கு மோதகம் என்னும் கொழுக்கட்டை படைப்பதன் நோக்கம், வெளியே வெறுமையாக இருக்கும் நம் உடலின் உள்ளே இருக்கும் இனிமையான அமிர்தத்தைப் போல் இருக்கும் மனத்தைப்போல், வெளியே வெறும் மாவாகச் காட்சியளித்தாலும் உள்ளேயிருக்கும் பூரணம் இனிப்பாக இருப்பதைப் போல் நம் வாழ்விலும் இனிமையும் பூரணமாய் அளிப்பார் விநாயகர். எவ்வாறு வெறும் அரிசி மாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும்.
விநாயகரைப் போன்ற எளிமையான கடவுள் வேறு யாரும் இல்லை. அவ ருக்குப் பிரசாதமாக அவல், பொரி கொடுத்தால் கூடப்போதும், இல்லை தெருவில் முளைத்துக் கிடக்கும் அருகம்புல்லை பறித்து வந்து சுத்தம் செய்து விநாயகருக்கு சாற்றினால் கூட போதும் அவரை மனம் குளிர செய்து விடலாம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிகவும் உகந்த நாட்கள் அந்த தினங்களில் செவ்வரளி, மற்றும் மஞ்சள் அரளி மலர்களை மாலை தொடுத்து வணங்குவது மிகவும் சிறப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.