எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மாணவர்களுக்கு விபத்துகாப்பீட்டுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் திருச்செந்தூரில் தெரிவித்தார்.
பள்ளி விழா
திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளியில் அட்டல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் திறப்புவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளிதாளாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் செல்வவைஷ்ணவி விருந்தினரை கௌரவித்தார். போக்குவரத்து மேலாளர் கிஷோர்பாபு வரவேற்புரையாற்றினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வுக்கூடத்தை பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தனர். தொடர்ந்து நடந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது: தமிழகத்தில் முதல் முறையாக அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் இப்பள்ளியில் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கியுள்ளது. கல்வித்துறை முன்னேற்றம் தான தமிழகத்தின் முன்னேற்றம் என்ற முனைப்பில் கல்வி அமைச்சர் செயல்பட்டு வருகிறார். கல்வித்துறையில் இந்திய கண்டம திரும்பி பார்க்கும் வகையில் அவர் செயல்பாடு உள்ளது. ப்ளஸ் 2 படிக்கும் போதே வேலை வாய்ப்பிற்கான பயிற்சிகள் அளிக்கபடும். கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்பட உள்ளது என பேசினார்.
அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: ஆயிரம் அன்னசத்திரத்தை காட்டிலும் ஒரு கல்விக்கூடம் திறப்பது பெரியது என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். காஞ்சி பெரியவர் பல லட்சம் மைல் தூரம் நடந்து ஆன்மிகத்தை வளர்த்தார். அவரது பெயரில் அமைந்துள்ள இந்த பள்ளி அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக செயல்படுகிறது மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்பள்ளி இந்திய அளவில் 112வது இடத்தையும் தமிழகத்தில் 6வது இடத்தையும் மாவட்டத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கு பரிசாக மத்திய அரசு வழங்கிய நிதியுடன் இணைந்து மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக அட்டல் அறிவியல் ஆய்வத்தை உறுவாக்கியுள்ளனர். இந்த ஆய்வகத்தால் இப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்பெறுவர். இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அப்துல்கலாம் கூறினார். அவரது கனவை இப்பள்ளி மாணவர்கள் நிறைவேற்றும் விதமாக விஞ்ஞானத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இதற்கு உறுதுணையாக செயல்படும் பள்ளியின் முயற்சி பாராட்டதக்கதாகும். தமிழகத்தில் கல்வித்துறை உலகளவில் பேசப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதற்காக 14 திட்டங்களை அறிவித்தார். இதில் முக்கியமானது பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தால் இந்திய அளவில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது. இத்திட்டத்திற்கு ரூபாய் 26 ஆயிரத்து 932 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். மாணவர்கள் அரசு தேர்வில் ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் முதலாவது இரண்டாவது இடங்களை பிடிப்பதால் மற்ற மாணவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. எனவேதான் கடந்த தேர்வில் ரேங்க் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது மாணவர்கள் ஒருசில நிமிடங்களில் தேர்வு ரிசல்ட் பார்த்திட எஸ்எம்எஸ் மூலம் செல்போனில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கல்வித்துறை சாதனைப்படைத்துள்ளது. 3 லட்சம் மாணவர்கள் 246 பாடங்களை படிக்கிறார்கள். இதில் ஐஏஎஸ், டாக்டர், இஞ்சினியர், அக்ரி என குறிப்பிட்ட 10 பாடங்களைத்தான் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்து படிக்கின்றனர். இதனால் வேலையில்லா திண்டாண்டம் உறுவாகிறது
கணினி பயிற்சி
மாணவர்களை 246 பாடங்களையும் படிக்கவைத்து அனைவருக்கும் வேலை வாய்ப்பை உறுவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரப்பட உள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் கணினி பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்காக 492 மையங்களில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் நீட் உள்ளிட்ட மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும். மேலும் சிபிஎஸ்சி தரத்திற்கு நிகராக அரசு பள்ளியில் கல்வித்தரம் உயர்த்த படஉள்ளது. இனி தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் இருக்காது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. இந்த கார்டில் ஆதார் எண் மற்றும் மாணவர்கள் ப்ளட் குருப் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதியப்படும். மாணவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் 48 மணிநேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க இந்த கார்டு பயன்படும். ரூபாய் 2 லட்சம் மதிப்பிலா விபத்து காப்பீடு செய்யப்படும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களுக்கு 2013ல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.7500 தொகுப்பு ஊதியதிலும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்துள்ள கட்டடத்தை அகற்றி ரூ. 2 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்ட பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளை அமைச்சர் வழங்கினார்.விழாவில் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் அனிதா, மாவட்ட அறிவியல் அலுவலர் நவராம்குமார், முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியஆதித்தன், பள்ளி கமிட்டி அறங்காவலர் சுந்தரம், ஒருங்கிணைப்பாளர் ஜீனத், நாராயணன், கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், அரவு மத்தவமனை தலைமை மருத்தவர் பொன்ரவி, அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்தின் மற்றும் பள்ளி ஆசிரியர் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் அரசி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.