எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுவை சட்டசபையில் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களை தவிர நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை மாநில அரசின் பரிந்துரையின் பேரில் நியமிக்க முடியும். புதுவை மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் கடந்த ஜூலை 4-ந் தேதி மத்திய உள்துறை நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை நியமித்தது. புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், மற்றும் செல்வகணபதி ஆகியோர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப் பட்டனர். இவர்கள் தங்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் படி சபாநாயகர் வைத்திலிங்கத்திடம்கடிதம் கொடுத்தனர். இந்த கடிதத்தை ஆய்வு செய்து அழைப்பதாக சபாநாயகர் கூறி இருந்தார். இந்த நிலையில் அன்றைய தினம் இரவோடு இரவாக கவர்னர் கிரன்பேடி 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் கவர்னர் மாளிகையில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து நியமன எம்எல்ஏக்கள் சட்டசபையில்தங்களுக்கு இருக்கை, அலுவலகம் உள்ளிட்ட சலுகைகளை ஒதுக்கித்தரும்படி சட்டமன்ற செயலாளர் வின்செனட் ராயரிடம் கடிதம் அளித்தனர்.இந்த கடிதத்தை ஆய்வு செய்து உரிய பதில்அளிப்பதாக சட்டமன்ற செயலாளர் கூறி இருந்தார். இதையடுத்து அதிகாரம் படைத்த நபரிடம்இருநது உரிய உத்தரவு வராததால் எம்எல்ஏக்கள் நியமனத்தை ஏற்க முடியாது என்று சட்டமன்ற செயலகம் 3 பேருக்கும்கடிதம்அனுப்பியது. இந்த நியமன எம்எல்ஏக்களை மத்திய உள்துறை நியமித்தது செல்லாது என்று அறிவிக்க கோரி முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயவேணி சபாநாயகரிடம் நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை எனவே இந்த நியமனத்தை ஏற்க கூடாது என்று கடிதம் அளித்தார். இதன் பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கம் தன் சொந்த விஷயமாக அமெரிக்கா சென்று விட்டார். அவர் கடந்த 30-ந் தேதி புதுவை திரும்பினார். இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியினர் நியமன எம்எல்ஏ தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து புகார் அளித்தனர். மத்திய உள்துறை நியமன எம்எல்ஏக்கள் தொடர்பாக புதுவை அரசுக்கு நேரடியாக கடிதம் அனுப்பியது. அதில் 3 நியமன எம்எல்ஏக்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.இதனால் சபாநாயகர் எம்எல்ஏக்களின் நியமனத்தை ஏற்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. கடிதங்களை ஆய்வு செய்து ஓரிரு நாளில்முடிவெடுப்பேன் என்று சபாநயாகர் வைத்திலிங்கதமம் கூறி இருந்தார். இந்த சூழ்நிலையில் புதுவை சட்டசபை செயலகம் 3 எம்எல்ஏக்களின் நிமனத்தை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சட்டமன்ற செயலாளர் வின்சென்ட்ராயா, நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோருகு ஒரு கடிதம்அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-இந்திய அரசியலமைப்பு சட்டம், புதுவை யூனியன் பிரதேச சட்டம் 1963 ஆகியவற்றிக்கு மாறாக 3 நிமன உறுப்பினர்கள் உரிய அதிகாரம் படைத்த நபரால் நியமிக்கப்படவில்லை. நியமனமே செல்லாது என்ற சூழலில், கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பதற்காக உங்களை எம்எல்ஏக்களாக அங்கீகரிக்க முடியாது. எனவே எம்எல்ஏக்களின் சலுகைகள் கோரிய உங்கள் கோரிக்கைகளை நிராகரிக்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். சபாநாயகர் வைத்திலிங்கத்தின் உத்தரவின் படி இந்த கடிதத்தை சட்டசபை செயலாளர் 3 பேருக்கும் அனுப்பி உள்ளார். மேலும் இந்த கடிதத்தின் நகல் அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் நிராகரித்து இருப்பதால் 3 நியமன எம்எல்ஏக்களும் 23-ந் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட