முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீபுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்பு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சூரில் இருந்து கொச்சியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திரும்பும்போது, வழியில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

இது தொடர்பாக ஒரு வாரத்துக்கு பிறகு கடத்தலில் நேரடி தொடர்புடைய பல்சர் சுனில் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நடிகர் திலீப் ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை அங்கமாலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த நவம்பர் 22-ம் தேதி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

குற்றப்பத்திரிகையில் திலீபின் முதல் மனைவியும் முக்கிய சாட்சியுமான மஞ்சு வாரியார் உட்பட 12 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில் இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

650 பக்க குற்றப்பத்திரிகையில் ரகசிய சாட்சியம் அளித்தவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. திலீப் 85 நாள் சிறை வாசத்துக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து