எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
முன்னதாக குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை குறிப்பாக வாழை பயிரிடப்பட்டு சேதமடைந்த நிலப்பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மேற்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
கடும் பாதிப்பு
கடந்த நவம்பர் 30-ம் தேதி ஒகி புயல் தாக்கியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 3500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஒகி புயலில் சிக்கி அடியோடு சாய்ந்தன. நூற்றுக்கனக்கான மரங்களும் வேரோடு சாய்ந்தன. வாழை, ரப்பர் மற்றும் கிராம்பு பயிரிடப்பட்ட நிலங்கள் பெரிதும் சேதத்திற்குள்ளாகின. இதனை தொடர்ந்து புயல் நிவாரண நடவடிக்கையில் தமிழக அரசு துரிதமாக இறங்கியது. பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்திற்கு மூன்று அமைச்சர்களையும் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் அனுப்பி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இவர்கள் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
போர்க்கால...
இதையடுத்து பழுதாகிப்போன மின்கம்பங்கள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு சீரடைந்தன. மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்தும் சீர்செய்யப்பட்டன. ஒகி புயலால் கடலில் சிக்கி மாயமான மீனவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடைசி மீனவர் மீட்கப்படும் வரை தேடுதல் வேட்டை தொடரும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. முன்னதாக புயலில் சிக்கி பலியான மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், இந்த நிதியுதவியை அதிகரிக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
முதல்வர் ஆறுதல்
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி சென்றார். அங்கிருந்து அவர் புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டம் சென்றடைந்தார். அங்கு கல்படி ஏலா பகுதியில் வாழை பயிரிடப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அவர் பார்வையிட்டார். மேலும், பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட அவர் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆறுதல் கூறினார். பின்னர், கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்தூரில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்தியில் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைவருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, எதிர்பாராதவிதமாக, துரதிர்ஷ்டவசமாக பேரிடர் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலிலே என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு அவர்களை இழந்து வாடி துடிக்கின்ற குடும்பத்தாருக்கு என்னுடைய ஆறுதலையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.
உடனடியாக உதவி
அரசைப் பொறுத்தவரைக்கும் புயல் அடித்த மறுகணமே வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை உடனடியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்யவேண்டும் என்று ஆணையிட்டு, அவரும் திருச்சியிலிருந்து நேரடியாக அன்றைய தினமே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து தங்கியிருந்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு எந்தெந்த விதத்திலே உதவி செய்யவேண்டுமோ அனைத்து உதவிகளும் அரசால் செய்யப்பட்டுள்ளது.
பிரதமரிடம் கோரிக்கை
கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு கரை சேரமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, அப்படிப்பட்ட மீனவர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உடனடியாக பிரதமரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. கரை திரும்புவதற்கும், அவர்களை காப்பாற்றுவதற்கும் தேவையான கப்பல்களும், விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அனுப்பிவைத்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு அவர்களை பத்திரமாக மீட்டெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தேன்.
அமைச்சர்களிடம்...
அதேபோல, மத்திய உள்துறை அமைச்சரிடத்திலும் இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடலுக்குச் சென்ற மீனவர்களை பத்திரமாக மீட்பதற்குண்டான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். அதேபோல, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடத்திலும் கோரிக்கை வைத்தோம். அவர்களும் 18 கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலமாக தேடுதல் பணிகளை மேற்கொள்வதாக எங்களிடத்தில் தெரிவித்தார்கள்.
மூத்த அதிகாரிகள்
அதுமட்டுமல்ல, தலைமைச் செயலகத்தில் 2 முறை கடலோர காவல்படை, கப்பற்படை, விமானப்படை, அதிகாரிகளை அழைத்து மீனவர்களை தேடுகின்ற பணியை முடுக்கிவிட வேண்டும் விரைந்து செயல்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவர்களும் அதை செய்வதாக எங்களிடத்திலே உறுதியளித்தார்கள். அதோடல்லாமல், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை உடனடியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து, அதில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் அங்கேயே மாவட்ட ஆட்சித்தலைவர்களாக பணிபுரிந்தவர்கள், அந்த மாவட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் என்ற காரணத்திற்காக அவர்களை அனுப்பி அந்தப் பகுதிகளில் என்ன தேவையோ அதை மக்களுக்கு உடனடியாக செய்து கொடுக்கவேண்டுமென்று கூறி இருந்தேன். அதன்படி ஐஏஎஸ் அதிகாரிகளும் இங்கேயே தங்கி முகாமிட்டு நிவாரணப்பணிகளை மேற்கொண்டார்கள்.
தொடரும் பணி ...
அதேபோல வேளாண்மைத்துறையின் முதன்மை செயலாளர் இங்கேயே முகாமிட்டு விரைந்து செயல்படவேண்டும், கடலுக்குச் சென்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை தேடுகின்ற பணிகளை வேகமாக, துரிதமாக முடுக்கிவிடவேண்டும் என்று ஆணையிட்டோம். அவர்களும் இங்கேயே தங்கி அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அரசைப் பொறுத்தவரைக்கும், ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும், நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் தொடர்ந்து தேடுகின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடைசி மீனவர் கிடைக்கின்ற வரை தேடுதல் பணி மேற்கொள்ளப்படுமென்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
தலையாய கடமை
எனக்கு முன்னாலே பேராயர் அவர்கள் பேசியது போல, உயிர் விலை மதிக்க முடியாதது, ஆகவே, எதை வேண்டுமானாலும் வாங்கலாம், உயிரை வாங்க முடியாது. எனவே விலை மதிக்க முடியாத உயிரை மீட்பது தான் எங்களது தலையாய கடமை. அதற்காக, அரசு முழுமூச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, இங்கே புயல் வருகின்றபொழுது மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இங்கே ஹெலிபேட் அமைத்தால் புயல் வருகின்ற காலங்களில் மீனவர்களை உடனடியாக காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். இதை ஏற்கனவே மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கையாக வைத்திருக்கின்றோம்.
உயர்த்தி அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஹெலிபேட் அமைத்தால், புயல் அடிக்கின்றபொழுது மீனவர்களை உடனடியாக கரை சேர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், வீடுகளை இழந்தவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அரசு தயாரைக இருக்கிறது. அதுமட்டுமல்ல, பசுமை வீடு திட்டத்தின் கீழ், தேவையான வீடுகளை கட்டித் தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, அருகாமையில் இருக்கின்ற கேரள அரசு, மீன்பிடிக்கச் சென்று இறந்த மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக 20 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
வாழ்வாதார நிதி
இதேபோன்று அறிவிக்க வேண்டுமென்று சொன்னார்கள். அம்மாவினுடைய அரசு மக்களுடைய குறைகளை போக்குகின்ற அரசு. மக்களுக்கு எந்த நேரத்திலும் துன்பம் ஏற்பட்டாலும் அதை தீர்க்கின்ற அரசாக இருக்கின்ற காரணத்தினாலே 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, புயலினால் மீன்பிடி தொழிலை செய்யமுடியாத நிலையை கருத்தில் கொண்டு, வாழ்வாதாரம் இழந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து மீனவர் குடும்பத்திற்கும் வாழ்வாதார நிதியாக தலா ரூபாய் 2500 நிதி ஒதுக்குவதாக நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதில் கிட்டத்தட்ட 31000 மீனவர் குடும்பங்கள் பயன்பெறுகின்றன.அதற்கு மேலும் 2500 ரூபாய் கூடுதலாக வழங்குவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றம் இல்லை
புயலால் பாதிக்கப்பட்டு இறந்த மீனவர் குடும்பத்திற்கு அரசு வேலை வாய்ப்பு தரவேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். அவர்களுடைய கோரிக்கை நியாயமானது என்பதால், அரசு இறந்த மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அவரவர் கல்வித் தகுதிக்கேற்றவாறு தமிழ்நாடு அரசால், தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுமென்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, காணாமல் போன மீனவர்களை தேடுகின்ற பணி முடுக்கிவிடப்பட்டு, இறுதிக்கட்டம் வரையிலும் தொடரும் என்பதைத் தெரிவித்திருந்தேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஏதுவாக சட்டபூர்வமான நடவடிக்கை வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். உறுதியாக அதற்குரிய அரசாணையை வெளியிட்டு வருவாய் நிருவாக ஆணையர் தலைமையில் ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளேன். இங்குள்ள மீனவர்களின் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு இக்குழு தனது அறிக்கையை உடனடியாக கொடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
நிவாரணம் அளிக்க...
மேலும், காணாமல் போன மீனவர் குடும்பத்தினர் விரைந்து நிவாரண உதவிகள் பெற ஏதுவாக காத்திருக்கும் காலத்தை எவ்வளவு தளர்வு செய்ய இயலுமோ அவ்வளவு தளர்வு செய்ய அறிவுறுத்தியுள்ளேன். ஆகவே, காணாமல் போன மீனவர்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிவாரணம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேடையிலே நீங்கள் என்ன கோரிக்கை வைத்தீர்களோ, அதில் பெரும்பாலான கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம்.
விவசாயிகளுக்கும்...
அதேபோல விவசாயிகள் இன்றைக்கு பயிரிட்டவைகளெல்லாம் புயலினால் சேதம் அடைந்திருக்கிறது, நெற்பயிரும் சேதம் அடைந்திருக்கிறது. அதற்கு தேவையான இழப்பீடு தொகையையும், அரசு வழங்க இருக்கிறது. வாழை மரங்கள் சேதம் அடைந்திருக்கிறது, அதற்குத் தேவையான நிவாரணமும் அரசு வழங்க இருக்கிறது. ரப்பர் மரங்கள் சேதடைந்திருக்கிறது, அந்த விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும். அந்த இழப்பீட்டுத் தொகை நேற்றே (நேற்று முன்தினம்) நான் அறிவித்திருக்கின்றேன். நிவாரணத் தொகை புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
கருவிகள்...
ஆகவே, புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு அறிவிக்கப்பட்ட அனைத்தையும் அரசு விரைந்து செயல்படுத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக வேகமாக, துரிதமாக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, மீனவர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கவேண்டும், அப்படி தகவல் கொடுத்தால் அவர்கள் உடனடியாக உயிருக்கு ஆபத்தின்றி கரை திரும்பிவிடுவார்கள் என்ற ஒரு கருத்தை சொன்னார்கள். ஆகவே, அம்மாவினுடைய அரசு மீனவர்களுக்கு, தற்போது உலக வங்கி நிதியுடன் ரூபாய் 65 கோடி மதிப்பில், 300 அடி உயரமுள்ள கோபுரங்கள் அமைத்து 25டபுள்யூ வி.எச்.எஸ் கருவிகளும், 5டபுள்யூ வி.எச்.எஸ், 31.3.2018-க்குள் வழங்கப்படும்.
படகுகளுக்கும்...
அதேபோல, புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்ற ஒரு கருத்தையும் சொல்லியிருக்கின்றார்கள். அதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. விரைந்து அந்த குழுக்கள், சேதமடைந்த அந்த படகுகளை பார்த்து, கணக்கிட்டு, சேதாரம் எவ்வளவு என்பதை அரசுக்கு தெரிவிக்கின்றபொழுது, சேதமடைந்த படகுகளுக்குண்டான நிவாரணத் தொகையும் அரசால் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆகவே, நீங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் அரசு விரைந்து செயல்படுத்தும். இவ்வாறு முதல்வர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட