முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் துப்பாக்கி மீது பித்துப் பிடித்தவர் அமெரிக்க போலீசார் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

புளோரிடா: புளோரிடாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் துப்பாக்கிகள் மீது பைத்தியமானவர் என்று அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.

புளோரிடாவின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிகோலஸ் க்ரூஸ் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 17 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிகோலஸ் க்ரூஸை கைது போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட முன்னாள் மாணவர் குறித்து போலீஸ் அதிகாரி கூறியபோது, நாங்கள் அவரது சமூக வலைதளங்களை நன்கு ஆராய்ந்து வருகிறோம். அவரை ஏதோ ஒரு சம்பவம் மிகவும் பாதித்துள்ளது. அவருக்கு நண்பர்கள் கிடையாது. அவர் துப்பாக்கிகள் மீது பைத்தியமாக இருந்துள்ளார் என்றார்.

அவருடன் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் கூறியபோது, ”எங்களுக்கு அவரை மிகவும் கூச்சம் சுபம் கொண்ட நபராகதான் தெரிந்திருக்கிறார். அவர் துப்பாக்கி, கத்திகள் குறித்து நிறைய பேசினார் ஆனால் யாரும் அதை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை” கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து