எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹேமில்டன் : ஹேமில்டனில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தினாலும் நிகர ரன்விகிதத்தில் நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.
ஆனால் 4 போட்டிகள் தொடர் தோல்வியை இங்கிலாந்து நிறுத்தியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுக்க பரபரப்பான விரட்டலில் நியூஸிலாந்து 192/4 என்று தோல்வி தழுவியது.
ஆனால் 19-வது ஓவரில் நியூஸிலாந்து அணி நிகர ரன் விகித அடிப்படையில் இங்கிலாந்தைக் கடந்ததால் அப்போதே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டது, இருந்தாலும் கடைசி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் தேவை என்ற நிலையில் நியூஸிலாந்து 9 ரன்களையே எடுக்க முடிந்தது.
இலக்கை விரட்டும் போது கொலின் மன்ரோ நேற்றும் அதிரடி மூடில் இருந்தார். 18 பந்துகளில் 50 எடுத்த அவர் 21 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அடில் ரஷீத்திடம் ஆட்டமிழந்தாலும் நியூசிலாந்து ரன் விகிதம் வெற்றிக்குத் தேவையான ரன் விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகவே இருந்தது.
மார்டின் கப்தில் 47 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார், மன்ரோ தன் 57 ரன்களில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் விளாசினார்.
இங்கிலாந்து முதலில் ஜேசன் ராயின் (21) அதிரடி மூலம் நல்ல தொடக்கத்தைக் கண்டது, ஆனால் டிம் சவுதி 2 விக்கெட்டுகளைச் சாய்க்க (2/22) டேவிட் மலான், மோர்கன் அணியை நிலை நிறுத்தும் வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. டேவிட் மலான் 32 பந்துகளில் அரைசதம் கண்டார். அதாவது ஃப்ரீ ஹிட் ஒன்றை மைதானத்துக்கு வெளியே அடித்தார். ஆனாள் அதன் பிறகு டிகிராண்ட் ஹோமிடம் (1/32) ஆட்டமிழந்து வெளியேறினார். 36 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 53 ரன்கள் விளாசி மலான் ஆட்டமிழந்தார்.
மோர்கன் பிறகு சாத்துமுறை செய்தார், அவர் தன் இஷ்டத்துக்கு பவுண்டரிகளை அடித்துக் கொண்டிருந்தார். 46 பந்துகளில் 4 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் மோர்கன். இன்னிங்ஸின் கடைசி பந்தை கிறிஸ் ஜோர்டான் சிக்சருக்குத் துக்க இங்கிலாந்து அணி 194 ரன்களுக்கு வந்தது.
194 ரன்கள் இலக்கு என்பது பேப்பரை கசக்கி எறிந்தாலே மையத்திலிருந்து சிக்ஸ் செல்லும் நியூஸி. மைதானங்களில் ஒன்றுமில்லை என்ற நிலையில் 20 ரன்களுக்கும் குறைவாக எடுத்து தோல்வியடைந்தாலும் நியூஸிலாந்து அணி நிகர ரன் விகிதத்தில் இறுதிப் போட்டிக்குள் நுழையும் என்ற நிலையே இருந்தது.
ஆனால் கொலின் மன்ரோ வேறு ஒரு மூடில் இருந்தார் பவர்பிளேயின் போதே 7 சிக்சர்களை தூக்கித் தூக்கி அடித்தார். அரைசதத்தை 18 பந்துகளில் எட்டினார். களவியூகக் கட்டுப்பாடுகள் முடிந்தவுடன் மோர்கன் ஸ்பின்னர்களிடம் பந்தை அளித்தார். ரஷீத் 3 பந்துகளில் மன்ரோவை வெளியேற்றினார். இவரும் லியாம் டாசனும் இங்கிலாந்தை வெற்றி வழிக்குத் திருப்பினர்.
இரு ஸ்பின்னர்களும் சேர்ந்து 8 ஓவர்களை வீசினர். இதில் டாசன். கேன் வில்லியம்சை பவுல்டு செய்தார். 7 ஓவர்கள் வரை இவர்கள் இருவரும் ஜோடியாகக் கட்டுப்படுத்தினாலும் டாசன் தன் கடைசி ஓவரில் 18 ரன்களை விட்டுக் கொடுத்தார். நியூஸிலாந்து அணி தாக்குதலை மீண்டும் தொடங்கிய தருணம் அது.
கப்தில் முதலில் நிதானித்து அதன் பிறகு பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார், அரைசதம் கடந்த பிறகு மலானின் நட்பு ரீதியான பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார், ஆனால் இவரிடமே பவுல்டும் ஆனார்.
19வது ஓவர் முதல் பந்தில் நியூஸிலாந்து 175 ரன்களை எட்டியதால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. கடைசி ஓவரில் கரன் அருமையாக வீசி 12 வெற்றி ரன்களைக் கொடுக்காமல் 9 ரன்களுக்கு மட்டுப்படுத்தி இங்கிலாந்தின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆட்ட நாயகனாக மோர்கன் தேர்வு செய்யப்பட்டார். புதன் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவை ஆக்லாந்தில் எதிர்கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க