எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன், அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கூறியதாவது:- கடந்த 28 ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2007-ல் இறுதி தீர்ப்பு வந்தபோது தமிழகத்தில் தி.மு.க.வும் மத்தியில் காங்கிரசும் ஆட்சியில் இருந்தன. இருப்பினும் இறுதி தீர்ப்பினை அரசிதழில் வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின்பு தமிழக முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா மிக நீண்ட சட்ட போராட்டம் நடத்தி கடந்த 2013-ல் நடுவர் மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட செய்து வரலாற்று சிறப்பு மிக்க சாதனை படைத்தார். நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அமைக்கவில்லை. அதனால் மீண்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வலுவான வாதங்களை எடுத்துவைத்து சட்ட போராட்டம் நடத்தியதன் பேரில் தற்போதைய இறுதிதீர்ப்பு கிடைத்துள்ளது. இதன்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மேலாண்மை வாரியம் அமைக்காமல் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
தமிழகத்தின் இந்த ஜீவாதார பிரச்சனையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு எந்த அறிவுரையும் கூறவில்லை. காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் இதற்காக காங்கிரசுக்கு எந்தவித சிறு அழுத்தமும் தரவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழக அரசும் அ.தி.மு.க.வும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தரும். தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை ஏற்க மறுப்பது மத்திய அரசு தமிழகத்திற்கும் டெல்டா விவசாயிகளுக்கும் செய்யக்கூடிய மாபெரும் துரோகமாகும். இந்த 2 கட்சிகளுக்கும் இனிமேல் தமிழகத்தில் இடமில்லை. அவர்களை தமிழக மக்கள் நிச்சயம் கண்டிப்பார்கள். அ.தி.மு.க. எம்.பி.க்கள் கடந்த 19 நாட்களாக பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி பிரச்சனைக்காக பாராளுமன்றம் 19 நாட்கள் முடக்கப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன அழுத்தங்கள் தேவையோ அ.தி.மு.க தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு கூறினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. மாநில இளைஞரணி இணை செயலாளர் கீர்த்திகாமுனியசாமி, மாவட்ட அவை தலைவர் செ.முருகேசன், நகர் செயலாளர் அங்குச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆனிமுத்து, சுந்தரபாண்டியன், தர்மர், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட பாசறை செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், முன்னாள் எம்.பி.நிறைகுளத்தான், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் சாமிநாதன், புரட்சித்தலைவி பசுமைத்தமிழகம் நிறுவனர் தலைவர் வி.என்.சுந்தர்ராஜன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் தஞ்சிசுரேஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கருணாகரன், மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளர் மருதுபாண்டியன், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணை செயலாளர் சதர்ன்பிரபாகரன், உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க.நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல