முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்காலிக பணத்தட்டுப்பாடு உடனடியாக சரி செய்யப்படும் - மத்திய அமைச்சர் ஜெட்லி உறுதி

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்தியாவில் போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும், தாற்காலிக பணத்தட்டுப்பாடு உடனடியாக சரிசெய்யப்படும் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இந்தியாவில், குஜராத், மகாராஷ்டிராவின் கிழக்கு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசம், பிகார், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும், ஏராளமானோர் 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்த அருண் ஜெட்லி, நாட்டில் பணப்புழக்கம் குறித்து ஆய்வு செய்துள்ளேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாட்டில் போதுமான அளவுக்கு பணப்புழக்கம் இருக்கிறது. வங்கிகளிலும் போதுமான பணம் கையிருப்பில் உள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் திடீர் பணத்தேவை, அதிக பணத்தேவை போன்றவை ஏற்பட்டு, ஒரே நேரத்தில் அதிகமானோர் ஏ.டி.எம்.மை பயன்படுத்துவதால் பீகார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் தாற்காலிக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுவும் உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது.  ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்ப போதுமான அளவுக்கு வங்கிகளிடம் கையிருப்பு உள்ளது. தாற்காலிக பணத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து