முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சல்மான்கானின் சகோதரர் ஒப்புதல்

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: ஐ.பி.எல். போட்டியை முன்வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சல்மானின் கானின் சகோதரர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியை முன்வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சோனு ஜலான் உள்ளிட்ட சிலரை மும்பைக் காவல்துறை கடந்த 15-ம் தேதி கைது செய்தது. சோனு ஜலான், நாட்டின் முக்கியமான சூதாட்டக்காரராக அறியப்படுபவர். இது குறித்த விசாரணையில் இணையத்தளம் வழியாக பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் இழந்தது தெரியவந்தது. ரூ. 100 கோடிக்கு மேலாக சூதாட்டம் நடத்தியதும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் இதில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் சல்மான் கானின் தம்பியும், நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கான். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அர்பாஸ் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

மும்பையில் உள்ள தானே காவல்துறை நேற்று நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் அர்பாஸ் கான். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அர்பாஸ் ஒப்புக் கொண்டார். ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ. 2.78 கோடியை இழந்ததாகவும் அர்பாஸ் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து