முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி என்கவுண்டர் நடத்தியதாக ராணுவ மேஜர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, போலி என்கவுண்டர் நடத்தியதாக ராணுவ மேஜர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

மணிப்பூரில் போலி என்கவுன்டர் நடத்தியதாக ராணுவ மேஜர் விஜய்சிங் பல்ஹாரியா மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2009-ம் ஆண்டு ஆசாத்கான் (12) என்ற சிறுவனை ராணுவத்தினர் கைது செய்து பயங்கரவாதி என குற்றம்சாட்டி சுட்டுக் கொன்றனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் நியமித்த விசாரணை கமிஷன் மூலம் ராணுவத்தினர் நடத்தியது போலி என்கவுன்டர் என தெரியவந்தது. இதையடுத்து ராணுவ மேஜர் விஜய்சிங் பல்ஹாரியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து