எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மறைந்த தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம் என பெயர் சூட்டப்பட வேண்டும், இதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளுமைமிக்க தலைவர்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு 18-ம் தேதியன்று வலியுறுத்தப்பட்டதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். மறைந்த ஜெயலலிதா தமிழக மக்களில் மனங்களிலும், இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். சுதந்திர இந்தியாவில் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராகவும், அளப்பரிய பொது வாழ்வுக்கு சொந்தக்காரராகவும், எண்ணற்ற சாதனைகளைப் படைத்த மறைந்த ஜெயலலிதாவின் வாழ்வு மறக்க முடியாத குறிப்பிடத்தக்கதாகும். அவர் பாரத ரத்னா விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர். அவரது திட்டங்களும், முயற்சிகளையும் நாட்டிலுள்ள பிற மாநிலங்கள் மட்டுமின்றி பிற நாடுகளிடமும் நன்மதிப்பைப் பெற்றன.
புகழ்பெற்ற நடிகை...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவப் பருவத்திலேயே மிகச் சிறந்த மாணவியாகவும், கலைத் திறன்களில் வல்லமை பெற்றவராகவும் விளங்கினார். மிகவும் புகழ்பெற்ற திரைப்பட நடிகையாகவும் இருந்ததுடன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அளவில்லாத புத்தகங்களைப் படித்து நிரம்ப ஆற்றலையும், அறிவையும் பெற்றிருந்தார். அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பல முக்கிய பிரச்னைகளை குறிப்பாக மாநில சுயாட்சி, உள்நாட்டு பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார். இந்தப் பேச்சுகளால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டுதல்களைப் பெற்றார்.
6 முறை முதல்வராக...
6 முறை முதல்வரும், அளப்பரிய திட்டங்கள்: கடந்த 1991-ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்று அவர் சந்தித்த தேர்தலில் மறக்க முடியாத மாபெரும் வெற்றியைப் பெற்றார். இதன்பின், 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் முதல்வராகப் பதவியேற்றார். 15 ஆண்டுகளில் ஆறு முறை முதல்வராகப் பொறுப்பேற்றார். மக்களவைத் தேர்தலிலும் மறக்க முடியாத வெற்றிகளை ஈட்டினார்.
பல்வேறு திட்டங்கள்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, தொட்டில் குழந்தைத் திட்டம், பெண்களுக்கு பலன் அளிக்கும் இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டங்கள், கர்ப்பித்த தாய்மார்களுக்கு நிதியுதவி, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி என அளப்பரிய பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தினார். தொட்டில் குழந்தை போன்ற திட்டங்களுக்காக அன்னை தெரசாவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டினார்.
முன்னுதாரணமாக...
தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையாகவும், விருப்பங்களாகவும், எண்ணங்களாகவும் திகழ்ந்தவர், ஜெயலலிதா. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய தலைவர். அவரது சிறப்பு வாய்ந்த தலைமை, முடிவு எடுப்பதில் உள்ள துணிவு, அரசியல் தனது நுண்ணறிவால் புரிந்து கொள்ளும் ஆற்றல், மாநில உரிமைகளாக குரல் கொடுத்து போராடுவது போன்ற அனைத்தும் அனைவராலும் எப்போதும் நினைவுகூரத்தக்கது.
பொருத்தமாக இருக்கும்
தமிழகத்தில் சமூக-பொருளாதார மாற்றங்களுக்கு மிகப்பெரிய பொறுப்புடையவராகத் திகழ்ந்தார். அவர் குரலற்றவர்களின் குரலாக, வலிமையற்றோரின் வலிமையாக இருந்து அவர்களுக்காக பாடுபட்டார். அவரது விருப்பங்களும், வேண்டுகோள்களும் தமிழகத்தைத் தாண்டி இருந்தது. சமூக மற்றும் பொது சேவைகள் மூலமாக மிகச்சிறந்த பொது வாழ்க்கை வாழ்ந்த அவரது வாழ்வு லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகும். எனவே, அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமகனுக்கான விருதினை வழங்குவது சாலப் பொருத்தமாக இருக்கும்.
அமைச்சரவைத் தீர்மானம்
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம் என பெயர் சூட்டுவது குறித்தும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்குவது தொடர்பாக கடந்த 9-ம் தேதியன்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. எனவே, ஜெயலலிதாவுக்கு மரணத்துக்கு பிந்தைய பாரத ரத்னா விருதினை வழங்கிட உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.