எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் ரூ.6கோடி மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் பேவர்பிளாக் சாலைகள் அமைத்திடும் வளர்ச்சித் திட்டங்களுக்கான பூமிபூஜையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் வசித்திடும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட முயற்சியின் பலனாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதியிலுள்ள 15தெருக்களில் ரூ.3கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய புதிதான சிமெண்ட் பேவர்பிளாக் சாலைகள் அமைத்தல் மற்றும் பேரையூர் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் ரூ.3கோடி செலவில் பேவர்பிளாக் சாலைகள் அமைப்பதுடன் பேரையூர் பைபாஸ் சாலையில் புதிய தார்ச்சாலை,தடுப்புச்சுவருடன் வடிகால் கட்டிட திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து பேரையூர்,டி.கல்லுப்பட்டி ஆகிய இரு பேரூராட்சிகளிலும் ரூ.6கோடி மதிப்பீட்டிலான பணிகளின் தொடக்கவிழா பூமிபூஜையுடன் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் முனைவர்.நடராஜன் தலைமை வகித்தார்.ஏராளமாக பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் ரூ.6கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து திலகமிட்டு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிதாவது: பொது மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி உருவாக்கித் தருவதில் அம்மா அவர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். அந்த வழியில் தான் முதல்வரும் துணைமுதல்வரும் மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.பேரையூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் அம்மாவின் அரசு ரூ.2கோடி செலவில் பைபாஸ் சாலை முழுவதுமாக சீரமைக்கப்பட்டு தார்ச்சாலை அமைக்கிறது.அம்மாவின் அரசு ஏழைகளுக்கான அரசு,சாமானியர்களுக்கான அரசு,தாய்மார்களின் அரசாக திகழ்கிறது.
நிறை பேர் உங்களை வந்து சந்திப்பார்கள்,பல்வேறு ஆதாரமில்லாத கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து விடுவார்கள்.அதற்கு பொதுமக்கள் செவி சாய்த்திட வேண்டாம்.அம்மாவின் அரசு செயல்படுத்திடும் திட்டங்கள் அனைத்தினாலும் ஏழைகளும்,சாமானியர்களும்,தாய்மார்களும் என அனைத்து பிரிவினரும் பயன்பெற்றிடுவார்கள்.இது போன்ற சிறப்பான திட்டங்களினால் இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக நமது அன்னைத் தமிழகம் விருது பெற்று சாதனை படைத்திருக்கிறது.அதே போல் துறை தோறும் தேசிய விருதுகளை அம்மாவின் அரசு வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது.அம்மாவுடைய அரசின் ஆயுள் காலத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று எத்தனையோ பேர் கனவு கண்டாலும் கூட அந்த கனவு பகல்கனவாகத் தான் போகும்.ஏனென்றால் காவல் தெய்வங்களாக தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று பேசினார்.
இந்த விழாவில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன்,பேரையூர் வட்டாட்சியர் இளமுருகன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,கள்ளிக்குடி ஒன்றியச் செயலாளர் உலகாணி மகாலிங்கம்,திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் அன்பழகன்,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணைச் சேர்மன் பாவடியான்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன் கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சுகுமார்,அன்னகொடி,சாமிநாதன்,முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,பாஸ்கரன்,தர்மர்,பழனிச்செல்வி ராமகிருஷ்ணன்,நாகலட்சுமி,மீனாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
01 May 2024ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.