முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு(பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான சட்டத்திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு அதிகமாகச் செல்லக்கூடாது. இப்போது அதைக்காட்டிலும் அதிகரிக்கும் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு உள்ளாக வேண்டியது இருக்கும் என்பதால் சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உயர்சாதி வகுப்பினருக்கு எந்தவகையிலும் இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கவர மத்திய அரசு திடீர் இட ஒதுக்கீட்டை அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில்,  இதுவரை உயர்சாதி வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு எந்தவகையிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இப்போது கொடுக்கப்பட உள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர், மற்றும் 5 ஏக்கர் நிலம் வரை வைத்திருப்போர் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறலாம். இந்த ஒதுக்கீட்டைக் கொண்டு வர அரசமைப்புச் சட்டம் 15, 16 பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டுவருவது அவசியமாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பா.ஜ.க.வின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், 3 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பொதுப்பிரிவினரிடையே வாக்குகளைத் தக்கவைக்கும் நோக்கில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து