எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், -கழக இதயதெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மாவின் ஆன்மாவின் கட்டளையின்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர் என வேடசந்தூர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சட்;டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம் புகழாரம் சூட்டி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பாளையத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாள் விழா கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கழக கொள்ளை பரப்பு செயலாளரும் பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை சிறப்புரையாற்றினார். ஒன்றிய கழக செயலாளர் மலர்வண்ணன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கழக பொருளாளர் உதயகுமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிசாமி, தலைமைக் கழக பேச்சாளர்கள் மாணிக்கம், பொன் ஸ்ரீராம், எரியோடு நகர செயலாளர் அறிவாளி, ஆகியோர் பேசினர்.
கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமை வகித்து பேசியதாவது
இன்றைய தினம் தமிழகம் முழுவதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. அவரை தமிழக மக்கள் நடிகராக பார்க்க வில்லை. அரசியல் தலைவராக பார்க்க வில்லை. மக்களின் மனம் கவர்ந்த தலைவராகத் தான் எம்.ஜி.ஆரைப் பார்த்து வருகின்றனர். ஏனெனில் அவர் தந்த திட்டங்கள் இன்னும் நம்மோடு உள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும். அதற்கு உணவு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். ஏழை எளியவர்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகவே அனைத்து ஜாதியினரும் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரியலாம் என உத்தரவிட்டார். விவசாயிகள் பயன் பெறுவதற்காகவே இலவச மின்சாரம் வழங்கினார். அவரது மறைவிற்குப் பின்னர் புரட்சி தலைவி அம்மா கட்சியை மீட்டெடுத்தார். புரட்சித் தலைவர் வழியிலேயே அம்மாவும் பல திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தினார்.
தி.மு.க. ஆட்சியில் மாநிலம் முழுவதும் மின்தடை இருந்தது. அதனை மாற்றி மின்மிகை மாநிலமாக ஆக்கிய பெருமை அம்மாவையே சாரும். அம்மா உணவகம் மூலம் குறைந்த செலவில் மனம் நிறைவாக உணவு சாப்பிட்டு செல்ல முடிகிறது. 2023 வரை தொலைநோக்கு திட்டத்தையும் அறிவித்து செயல்படுத்தினார். புரட்சித் தலைவர் மறைவிற்குப் பின்னர் கட்சி உடையும் என்றனர். ஆனால் அம்மா அதனைத் தகர்த்தெறிந்து கட்சியை காப்பாற்றினார். அம்மா மறைவிற்குப் பின்னர் ஆட்சி விரைவில் கவிழ்ந்து விடும் என எதிர்கட்சிகள் புழுதி வாரி தூற்றினர். ஆனாhல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆன்மாவும், புரட்சி தலைவி அம்மாவின் ஆன்மாவின் கட்டளைப்படி கட்சியின் அடிமட்ட தொண்டர்களாக இருந்து உயர்ந்து வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியையும் ஆட்சியையும் காத்து வருகின்றனர்.
அம்மா ஆட்சியின் போது பொங்கல் பரிசும் ரூ.100 பணமும் வழங்கினார். அவர் வழியில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கினர். அம்மா ஆட்சியில் ஆடு வழங்கப்பட்டது. தற்போது முதல்வரும், துணை முதல்வரும் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் எ;ன்பதற்காக கட்சி பாகுபாடின்றி ஆடு மட்டுமின்றி கோழியும் வழங்குகின்றனர். பெண்பிள்ளை படிக்க வேண்டும் என்பதற்காக தாலிக்கு 4கிராம் தங்கம் அம்மா வழங்கினார். அவரின் வழியில் முதல்வரும் துணை முதல்வரும் 8 கிராம் தங்கம் வழங்குகின்றனர். மேலும் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கி வருகின்றனர். தாய்மார்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளது தான் கழக அரசு. அம்மாவின் கனவை கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நனவாக்கி வருகின்றனர்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாவிட்டாலும் கழக நிர்வாகிகள் பம்பரமாக மக்கள் சேவையாற்றி வருகின்றனர். இதுதான் அண்ணா தி.மு.க. என்று பேசினார். நிறைவாக பாளையம் பேரூர் கழக செயலாளர் பெருமாள் நன்றி கூறினார். ;
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.