முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நிறுத்தம்: பாகிஸ்தான் திடீர் முடிவு

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

லாகூர், லாகூர், அட்டாரி நகரங்கள் இடையே இயக்கப்பட்டு வரும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தி வைப்பது என திடீரென முடிவு எடுத்துள்ளது

சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் இடையே ஆரம்பத்தில் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் அது லாகூரில் இருந்து, பஞ்சாப்பின் அட்டாரியுடன் நிறுத்தப்பட்டது. மேலும், 1994-ம் ஆண்டு முதல், வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இப்போது எல்லையில் போர் பதற்றம் நிலவி வருவதால், இந்த ரெயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தி வைப்பது என திடீரென முடிவு எடுத்தது.

இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதை கருத்தில் கொண்டு, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நிறுத்தப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு மேம்படும் போது, இந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கும் என்று அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து