முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உன்னாவ் பெண் விவகாரம்: குல்தீப் செங்கார் கட்சியில் இருந்து ஏற்கனவே சஸ்பெண்டு: பா.ஜ.க. தகவல்

புதன்கிழமை, 31 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : உன்னாவ் பெண்ணின் பாலியல் வன்கொமை விவகாரத்துக்கு பின்னர், குல்தீப் செங்கார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது

உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவோ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பா.ஜ.க. எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். மேலும் இந்த புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், இதற்காக நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன் அப்பெண் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து கடந்த 28-ம் தேதி அப்பெண் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இது திட்டமிட்ட கொலை முயற்சி என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உ.பி. பா.ஜ.க. தலைவர் சுவதந்திர தேவ் சிங் கூறுகையில்,

குல்தீப் செங்கார் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார். இதனை முன்னாள் பா.ஜ.க. தலைவர் உறுதி செய்வார். குற்றவாளிகளின் பக்கம் என்றுமே பா.ஜ.க. நிற்காது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து