எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : சேலத்தில் நேற்று புதிய சட்டக் கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் முதல்வர் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது,
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சட்டக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு குறைந்த செலவில் சட்டக் கல்வி வழங்கிட புதிய 3 அரசு சட்டக் கல்லூரிகள் இந்த ஆண்டு துவங்கப்பட உள்ளன. இதற்காக ரூபாய் 9 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலத்தில் புதிய சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பக் கட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூபாய் 7 கோடியே 70 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவுள்ளது.
தெற்காசிய நாடுகளில் சட்டக் கல்விக்கென தோற்றுவிக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தான். ஆசியாவிலேயே மிகக்குறைந்த கட்டணத்தில் தரமான சட்டக்கல்வியை இப்பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கென தனியாக சென்னை பெருங்குடியில் 62 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வளாகம் அமைக்கப்பட்டு, அம்மாவால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இப்பல்கலைக்கழக விரிவாக்க பணிகளுக்காக கூடுதலாக 10 ஏக்கர் நிலம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 13 சட்டக் கல்லூரிகளில் 11 சட்டக் கல்லூரிகள் அரசு சட்டக் கல்லூரிகளாகும். சென்ற ஆண்டு விழுப்புரம், தருமபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் புதியதாக அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சட்டக்கல்லூரிக்களுக்கென சொந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவாக முடிக்கப்படும். திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் 79 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி அம்மாவால் நிறுவப்பட்டது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், பெருங்குடி வளாகத்தில் அனைத்திந்திய செய்தியாளர் சட்ட உதவித் தொகுதி என்ற திட்டத்தினை நிறுவியுள்ளது. சட்ட மாணவர்களுக்கு சிறந்த சட்டக் கல்விப் பயிற்சியை அளிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். அம்மா அரசின் இடையறாத முயற்சியின் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசிடம் அம்மாவின் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீதித்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை புகுத்துவதன் அவசியத்தையும். அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் கருத்தில் கொண்டும், இத்துறையில் முழுமையாக மின்னணு ஆளுமை முறைகளை கொண்டு வர ஏதுவாக நீதிமன்றங்களில் நீதிமன்றங்களில் நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள் முறையினை புகுத்திட வேண்டுமென்ற உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, அம்மாவின் அரசால் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீதித்துறையில் கணினிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ஏதுவாக பல்வேறு பதவிகளுக்கு 1188 பணியிடங்கள் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவாக நீதி கிடைக்கச் செய்வதை கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணியாளர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நீதிமன்றங்களின் தேவைகளுக்கு ஏற்ப உடனுக்குடன் நிறைவேற்றும் உணர்வு கொண்ட அரசாக அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள் வெங்கடாசலம் மற்றும் வெற்றிவேல் ஆகியோரது கோரிக்கையை ஏற்று ஓமலூரிலிருந்து முத்துநாயக்கன்பட்டி, பாலக்குட்டப்பட்டி, கே.ஆர்.தோப்பூர், காடையாம்பட்டி வழியாக 6 நடைகள் காலை, மதியம், மாலை நேரங்களில் புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலே முதன்முதலாக சேலம் மாநகரத்தில் தான் சுமார் 67.5 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ்போர்ட் அமையவிருக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி செய்திடவும் பொழுதுபோக்கவும் 18 பூங்காக்களை அமைத்திருக்கிறோம். ஏற்கனவே தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் துவக்கி இடையில் சரியான முறையில் ஒப்பந்தக்காரர்களுக்கு பணியை ஒப்படைக்காத காரணத்தினால் பணி பாதியிலேயே நின்று விட்டது. அதை மீண்டும் துவக்கி அந்தத் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கின்றோம். சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அம்மாவால் சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு என 3 தாலுகாக்கள் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு அவற்றிற்கு புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
துணை மேயராக இருந்த நடேசன், மணியனூரில் பள்ளிக்கூடம் தேவையென்று வைத்த கோரிக்கையை ஏற்று அம்மாவால் திறந்து வைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் புதிதாக தொடங்கப்படவுள்ள சட்டக் கல்லூரியும் தற்போது இயங்கவுள்ளது. அதேபோல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சேலம் மாநகரில் ரூபாய் 948 கோடியில் பிரம்மாண்டமான பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இதில், குடிநீர் விநியோகத்திற்காக ரூபாய் 165 கோடியும், பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக ரூபாய் 145 கோடியும், பழைய பேருந்து நிலையத்தை இரண்டடுக்கு பேருந்து நிலையமாக கட்டுவதற்கு ரூபாய் 92 கோடியும், நேரு கலையரங்கத்தை அனைத்து அம்சங்களுடன் கூடிய சிறந்த கலையரங்கமாக உருவாக்கிட ரூபாய் 72 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குமரகிரி ஏரி மற்றும் பள்ளப்பட்டி ஏரிகளை புனரமைப்பு செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. மேலும், பாதாள சாக்கடைத் திட்டம், பூமிக்கடியில் வயர் பதிக்கப்பட்டு மின் இணைப்பு திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரிக்கு எதிரில் சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டிடங்கள் இந்த ஆண்டே கட்டப்பட்டு அவ்விடத்தில் மாணவர்கள் பயிலக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும். சேலம் மாநகரில், திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அம்மாவின் அரசு, சொல்வதை நிறைவேற்றுகின்ற அரசு. சேலம் வளர்ந்து வருகின்ற மாநகரம். எதிர்காலத்தில் வெளிநாட்டிற்கு இணையாக உருவாக்கிக் காட்டுவோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல