முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக மழை பெய்யாவிட்டாலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு வாரமாக தினமும் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலையும் வடபழனி, கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி, அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, கீழ்ப்பாக்கம், முகப்பேர் உள்பட பல இடங்களில் மழை பெய்தது. நேற்று அதிகாலையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களிலும், சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும். வளிமண்டல சுழற்சி காரணமாக மேக கூட்டங்கள் திரண்டு வருவதால் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து