எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என்று சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் அதிபர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.
கடந்த 4-ம் தேதி சான் பிரான்சிஸ்கோ-வில், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக "யாதும் ஊரே" என்ற திட்டத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகெங்கும் சென்று தமிழரின் பண்பாட்டுச் சிறப்பையும், அறிவுத் திறத்தையும் பறைசாற்றி தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்து வருகின்றீர்கள். உலகில் எந்த மூலையில் இருந்தாலும், உங்கள் உயிராய் தமிழும், உள்ளமெல்லாம் தமிழ்நாடும் விளங்குகிறது என்பதை நான் அறிவேன். உலகின் மாபெரும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், புத்தொழில்கள் என துறைகள்தோறும் சாதனைகள் செய்து பல நாடுகளில், புதிய தொழில் பலவற்றையும் துவக்கி கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உழைப்பால் தமிழகம் உயர்ந்து விளங்குகிறது.
இந்தியாவின் சிறந்த மாநிலமாகிய தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பிக்கும் பொருட்டு, உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்களின் சீரிய ஆலோசனைகளைப் பெறவும், தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம். உங்களைத் தேடி தமிழ்நாடு அரசு சார்பில் முதல் முறையாக பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் என்ற முறையில் நான் இங்கு வருகை தந்துள்ளேன்.
உலகெங்கும் வாழும் தமிழர்களை நினைத்திட, ஒரு புதிய உறவுப்பாலம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் "யாதும் ஊரே" என்ற புதிய திட்டத்தினை நியூயார்க்கில் துவக்கி வைத்தேன். தமிழ்நாடு அரசு தொழில் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்தில் "யாதும் ஊரே" என்ற தனித் தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் முதலீடு, ஆலோசனைகள் நேரடியாக தமிழ்நாடு அரசை வந்தடையும். நீங்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறி, என்று சொல்லக்கூடிய ஒற்றைச் சாளர முறையில் அனைத்து அனுமதிகளும் வழங்கப்படும். நிலையான ஆட்சி, சிறப்பான நிர்வாகம், அமைதியான சூழல், திறன்மிகு மனித வளம், ஈடு இணையில்லா உட்கட்டமைப்பு, தடையில்லா மின் விநியோகம், இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்கும் வகையிலான பூகோள அமைப்பு என தமிழ்நாட்டின் தனித்துவத்திற்கு, இங்கு விரும்பி வந்து தொழில் துவங்கும் பன்னாட்டு நிறுவனங்களே சான்று.
அறிவுத் திறமை, உழைப்பு இரண்டு அம்சங்களும் உள்ளவர்கள் தமிழர்கள். அந்த உழைப்பால் இன்று உயர்ந்து. அமெரிக்காவில் நீங்கள் பணிபுரிகின்றீர்கள், புதிய, புதிய தொழில்களை ஏற்படுத்தி இன்றைக்கு தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றீர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், கல்வியில் ஒரு சிறந்த மாநிலமாக இன்று விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பதிலே முதன்மையாக விளங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு தான். இன்றைக்கு உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 48.6 சதவீதமாக உயர்ந்திருக்கின்றது. அதற்கு காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கின்றபொழுது கல்வியில் புரட்சி, ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். அந்தப் புரட்சியும் மறுமலர்ச்சியும் தான் இன்றைக்கு உயர்கல்வி படிக்கின்ற மாணாக்கர்களின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கின்றது.
அது மட்டுமல்ல, தமிழகத்திலே சிறப்பான கல்வி இருக்கின்ற காரணத்திலேதான், அமெரிக்காவிலே பலர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே கிடைக்கப்பெற்ற அறிவின், திறமையின் காரணமாக அறிவுப்பூர்வமான கல்வியை வளர்த்ததின் காரணமாக இன்றைக்கு வெளிநாட்டில்கூட தமிழர்களுடைய திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முடியாததை முடியும் என சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள் தமிழர்கள், அந்தச் சக்தி தமிழர்களுக்கு இருக்கின்றது. சாதிக்கப் பிறந்தவர்கள் தமிழர்கள். அப்படி சாதிக்கப் பிறந்தவர்கள் இங்கே சாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதேபோல தமிழகத்திலும் நீங்கள் சாதிக்கக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.
தொழில் துறையைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே முதல் இடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கின்றது. சிறுதொழிலைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான். அதேபோல், சிறுதொழில் மூலமாக அதிகமான வேலைவாய்ப்பு வழங்குவதிலும் இந்தியாவிலே முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான். ஆகவே, ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி முதலீடு செய்து பெரிய தொழில் தான் செய்ய வேண்டும் என்ற நிலை கிடையாது. சிறிய, சிறிய தொழில்களில் முதலீடு செய்தால் கூட, அதற்கும் தமிழ்நாடு அரசு உங்களுக்கு துணை நிற்கும் என்று இந்த நேரத்தில் அழைப்பு விடுக்கின்றேன்.
இன்றைக்கு நாங்கள் அமெரிக்காவில் வந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றபொழுது, இந்தியாவில், முதன்மை இடத்தில் தமிழகம் வரவேண்டும் என்று தான் நினைத்தோம். ஆனால் உங்களையெல்லாம் பார்த்து பேசியபொழுது, உலக அளவிலேயே தமிழகத்தை முதன்மை இடத்தில் கொண்டுவர முடியும் என நம்பிக்கை பிறந்துள்ளது. அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழர்கள் இன்றைக்கு தொழில் துறையிலும், மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்குகின்றார்கள், களில் பல லட்சம் பேர் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும், உங்களுடைய நண்பர்களும் தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு முன்வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றேன். இந்த நாட்டிலே நீங்கள் இருந்தாலும், உங்கள் உள்ளம் எல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். ஆகவே, தாய் தமிழகத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை நல்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.