எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,கள்ளிக்குடி ஒன்றியத்தின் பல்வேறு கிளைக்கழக கிராமங்களில் நடைபெற்ற பூத்கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,கழகஅம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிடும் வகையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றிய பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் கே.வெள்ளாகுளம்,மையிட்டான்பட்டி,நல்லமநாயக்கன்பட்டி,ஆவல்சூரன்பட்டி,உன்னிபட்டி,பேய்க்குளம்,சென்னம்பட்டி,ஓடைப்பட்டி,மேலப்பட்டி,சோளம்பட்டி ஆகிய கிளைக் கழகங்களில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்டபட்ட அனைத்து கிளைக்கழக பூத்கமிட்டி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியின் போது கூறியதாவது: இந்திய வரலாற்றிலே ஒரு புரட்சிகரமான சாதனையாக சாமானியர் சரித்திரம் படைத்திட முடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலே மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்ற வகையிலே நமது முதல்வர் எடப்பாடியார் உலக முதலீட்டாளர்களையும்,தமிழ் முதலீட்டார்களையும் தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில் மேற்கொண்டுள்ள முயற்சி உலகத்திலுள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் பாராட்டையும்,நன்மதிப்பையும்,நம்பிக்கையையும் பெற்றுள்ளது.இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், 5முறை தி.மு.க ஆட்சியிலிருந்தபோது தங்களால் செய்ய முடியாததை ஒரு சாமானியனாகிய முதல்வர் சாதித்து காட்டியிருக்கிறாரே என்கிற அரசியில் காழ்ப்புணர்ச்சியின் எல்லையில் இன்றைக்கு பல்வேறு கருத்துக்களை பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மக்களிடம் கிடைத்துள்ள மகத்தான வரவேற்பினை பார்த்து,முதல்வர் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்கிற அந்த நிர்வாகத் திறமை,தமிழகத்தை ஏற்றம் பெறச் செய்திட அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் மக்களிடம்மிகப் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் செல்வாக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது.ஆகவே இனி நம்முடை அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சத்தினால் இதனை வழக்கம் போல் திசை திருப்பி,வழக்கம் போல் மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று குட்டையை குழப்பும் வேலையை ஸ்டாலின் துவங்கியிருக்கிறார்.சட்டசபையை நடத்த முடியாது என்று ஸ்டாலின் சொன்னார்.சட்டசபையை முதல்வர் எடப்பாடியார் நடத்திக் காட்டினார்.நிதி நிலையை தாக்கல் செய்ய முடியாது என்றார் ஸடாலின்.ஆனால் முதல்வரும் துணை முதல்வரும் நிதிநிலையை தாக்கல் செய்து சாதித்து காட்டினார்கள்.நிலையான அரசை தர முடியாது என்று அவர் சொன்னார்.ஆனால் முதல்வர் அம்மாவுடைய அரசை நிலையானதாக மாற்றி காட்டினார்.எதையெல்லாம் முடியாது என்று ஸ்டாலின் சொல்கிறாரோ அதையெல்லாம் பதட்டமின்றி லாகவமாக முடியாது என்பதை நம்முடைய முதல்வர் முடித்து காட்டி வருகிறார். சாமானிய முதல்வர்வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவது காலம் காலமாக வரவேற்க கூடிய ஒன்றாக இருக்கிறது.ஆனால் இங்கு மட்டும் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனங்கள் வைக்கிறார்களே தவிர பிற மாநிலங்களில் இது போன்று நடப்பது கிடையாது.பக்கத்து மாநில முதல்வர்கள் கூட வருடத்திற்கு இருமறை வெளிநாடுகளுக்கு வந்து செல்வதாக அங்கிருப்போர் கூறுகின்றனர்.தமிழ்நாட்டை சேர்ந்த முதல்வர் வெளிநாடுகளுக்கு வரவில்லையே என்கிற ஏக்கம் எங்களுக்கு இருந்தது அதனை போக்கியவர் எடப்பாடியார் என்று அங்குள்ள முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.முதல்வரின் வெளிநாட்டு பயணம் மக்கள் மத்தியிலே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இதில் எதிர்கட்சித் தலைவர் என்ன குறையை கண்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை.
இன்றைக்கு எதிர்கட்சி தலைவர் தனக்கென்று ஆலோசனை வழங்;குகிற குழுவை வைத்துக் கொண்டு அதன் சொற்படி தான் இன்றைக்கு செயல்பட்டு வருகிறார்.ஆனால் முதல்வரே தனக்கென்று அப்படியொரு ஆலோசனை குழுவினை வைத்துக் கொள்ளாமல் மக்கள் பணியில் பெற்ற பணியில் கிடைத்த அனுபவத்தை வைத்து செயல்பட்டு வருகிறார்.ஆகவே எதிர்கட்சி தலைவர் 110விதி தொடங்கி எல்லா சாதனைகளுக்கும் அவர் வெள்ளை அறிக்கை கேட்கிறார்.எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்றால் அது வெற்றி பெற்றுவிட்டது என்றேஅர்த்தம்.முதல்வர் எதிலெல்லாம் வெற்றி பெற்றுவிட்டாரோ அதிலெல்லாம் எதிர்கட்சிதலைவர் வெள்ளை அறிக்கை கேட்பார்.110வது விதி தமிழக மக்களின் தலைவிதியை மாற்றியிருக்கிறது.குடிமராமத்து நீராதாரத்தை உயர்த்தியிருக்கிறது.ஆகவே ஸ்டாலின் வெள்ளையறிக்கை கேட்கும் திட்டங்கள் வெற்றி பெற்றிருக்கிறது,மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது என்று அர்த்தம்.அந்த வெற்றிபெற்றுள்ள திட்டங்களின் வரிசையில் தமிழக முதல்வரின் வெற்றி பயணம் இடம் பெற்றிருக்கிறது.இதன் மூலம் அவரது சாதனை உலகின் எட்டாவது அதிசயமாக உலக தமிழர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டங்களில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட சார்பு அணிநிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சிங்கராஜபாண்டியன்,பிரபுசங்கர்,வேல்பாண்டி,வேல்ராமகிருஷ்ணன், கண்ணன்,அன்னக்கொடி,சுகுமார்,செல்வம்,சாமிநாதன்,தாத்தப்பன்,மணி,முருகன்,எஸ்.பி.எஸ்.ராஜா,சிவன்காளை,ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.