எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இடைதேர்தல் வருவதற்கு காங்கிரஸ் கட்சியின் சுயநலமே காரணம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இடைதேர்தல் ஏன்?
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அதன் பிறகு இடைதேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொகுதியில் வருகிற 21-ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக அமைச்சர்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்து வந்தார்கள். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
முதல்வர் பிரச்சாரம்
நேற்று அவர் நாங்குநேரி தொகுதிக்கு வந்தார். அப்போது அவரை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பிறகு ரெட்டியார்பட்டி பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
நாங்குநேரி தொகுதியில் இடைதேர்தல் வரக்காரணமே காங்கிரஸ் கட்சியின் சுயநலம்தான். இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல். நமது வேட்பாளர் நாராயணன் இந்த பகுதியை சேர்ந்தவர். அவர் மக்களின் குறைகளை கேட்பார். ஏற்கனவே இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் பெரிய பதவி கிடைத்ததும் ஓடிப் போய் விட்டார். அவர் இந்த தொகுதி மக்களை மறந்து விட்டார். இப்போது இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் இப்படித்தான். இங்கு அலைகடலென திரண்டிருக்கிறீர்கள். ஏதோ வெற்றி விழா நடப்பது போல் கூடியிருக்கிறீர்கள். நீங்கள் யாரை தேர்ந்தெடுத்தால் நல்லது என்று முடிவு செய்து விட்டு வாக்களிக்க வேண்டும். ரெட்டியார்பட்டி நாராயணன் இங்கே பிறந்து வளர்ந்தவர். அவரை நீங்கள் எளிதில் அணுகலாம். அவர் உங்களுக்கு நன்மை செய்யக் கூடியவர். ஆகவே உங்களுக்கு தேவை நன்மை செய்யும் வேட்பாளரா? அல்லது வெளியூரில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளரா? காங்கிரஸ் வேட்பாளர் ஒரு கோடீஸ்வரர். அவரை நீங்கள் சுலபமாக அணுக முடியாது. எனவே நீங்கள் எளிதில் அணுக கூடிய அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாய்ப்பு தாருங்கள்.
ஸ்டாலின் மீது தாக்கு
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு இடைதேர்தல் வரும் போதுதான் திண்ணை பற்றி ஞாபகமே வரும். இடைதேர்தல் நடக்கும் போது திண்ணையில் வந்து உட்கார்ந்து பிரச்சாரம் செய்வார். பெட்ஷீட் போட்டு உட்கார்ந்து மக்களை ஏமாற்றுவார். உங்களுக்கு என்ன பிரச்சினை என்றெல்லாம் கேட்டு மனு வாங்குவார். இவர் மனு வாங்கி என்ன செய்யப் போகிறார். அந்த மனுவை யாரிடம் தருவார். அந்த மனுக்கள் எல்லாம் குப்பை தொட்டிக்குத்தான் போகும். ஆளும் கட்சி பிரதிநிதியிடம் மனுக்கள் கொடுத்தால் அந்த பிரச்சினை தீரும். சின்ன பிரச்சினை என்றால் அவரிடம் கொடுக்கலாம். பெரிய பிரச்சினை என்றால் அமைச்சர்கள், முதல்வரிடம் கொடுக்கலாம். ஸ்டாலின் மனு வாங்கி என்ன செய்ய முடியும். பாராளுமன்ற தேர்தலின் போது ஏராளமான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார். கல்விக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி என்றெல்லாம் சொன்னார். விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் தருவதாக சொன்னார்கள். வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் தருவதாகவும் இவர்கள் சொன்னார்கள். இப்படி பொய்யெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் வேலூர் தொகுதியில் தேர்தல் நடந்த போது மக்கள் உண்மையை புரிந்து கொண்டு விட்டார்கள். இனி மக்களை ஏமாற்ற முடியாது. எனவே உங்களுக்கு நன்மை செய்யக் கூடிய அ.தி.மு.க வேட்பாளருக்கு வாக்களித்து அமோக வெற்றி தேடி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பிறகு நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் முதல்வர் எடப்பாடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.
இன்றும் பிரச்சாரம்
நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்ப்பட்டி நாராயணனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சூறாவளி பிரசாரம் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் 3 மணிக்கு களக்காடு ஒன்றியத்தில் உள்ள ஏர்வாடி பேரூராட்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதையடுத்து திருக்குறுங்குடி பேரூராட்சி, மாவடி, களக்காடு பேரூராட்சி, சிங்கிகுளம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதன் பின்னர் வரும் 18-ம் தேதி மாலை 3 மணிக்கு பாளையங்கோட்டை ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து முன்னீர்பாளையம், கிருஷ்ணாபுரம், கே.டி.சி.நகர், சீவலப்புரி ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில்...
இதற்கிடையே விக்கிரவாண்டியில் வரும் 16-ம் தேதி காணை மற்றும் கோலியனூர் ஆகிய ஒன்றியத்தில் உள்ள 6 இடங்களிலும் 17-ம் தேதி கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள விராட்டிக்குப்பம், விக்கிரவாண்டி மற்றும் காணை ஒன்றியங்களில் உள்ள தும்பூர், முட்டத்தூர், பனைமலை அன்னியூர் மற்றும் கடையம் ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.