முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள நீரில் இறங்கி மக்களை மீட்ட அசாம் எம்.எல்.ஏ.

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திஸ்பூர் : அசாமில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்ட எம்.எல்.ஏ. மிரினால் சாக்கியாவுக்கு வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. 

அசாமில் கடந்த ஒரு வாரமாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஏராளமான நெடுஞ்சாலைகள் மழை நீரில் மூழ்கியிருப்பதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.  இதனிடையே, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அம்மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான மிரினால் சாக்கியா, நேற்று முன்தினம் தனது கும்தாய் தொகுதியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை பார்வையிடுவதற்காக காரில் சென்றார். அப்போது, இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய அவர், வெள்ளத்தில் சிக்கியிருந்த பொதுமக்களையும், கால்நடைகளையும் மீட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. தொகுதி மக்களுக்காக களத்தில் இறங்கி பணியாற்றிய எம்.எல்.ஏ. சாக்கியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து