எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை ஒப்பிட்டு பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்த பணி பூஜ்யம் தான் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் 6-வது மண்டலத்திற்குட்பட்ட பெரம்பூரில் பள்ளித்தெருவில் கொரோனா தொற்றுநோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 136 களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களை அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். அதே போன்று கொரோனோ தொற்றில் குணமடைந்தவர்களுக்கு பரிசு பெட்டகங்களையும் பழங்களை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.
இதை தொடர்ந்து காய்ச்சல் சிகிச்சை முகாமில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
அப்போது அமைச்சர் உதயகுமார் பேசுகையில், கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட கலெக்டர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் ஆலோசனை நடத்துவதோடு அனைத்து மாவட்டங்களிலும் நேரில் சென்று அதிகாரிகளை சந்தித்து, அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
சென்னை மாநகரை பொறுத்த வரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 124 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர் இப்போது அவர்களில் 94,ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்,
மருந்தே இல்லாத இந்த நோய்க்கு உயிரை பணயம் வைத்து குணப்படுத்தி வரும் மருத்துவர்கள்,களப்பணியாளர்கள்,.செவிலியர்கள் உள்ளிட்ட உங்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்ட சிறப்பான சீரிய நடவடிக்கையின் காரணமாகவே 87 சதவீதம் பேர் சென்னையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
சென்னை திருவிக நகர் மண்டலத்தில் 8610 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர், இதில் 7276 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1070 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை திருவிக நகர் மண்டலத்தில் 20ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு 540 பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 2307 தெருக்களில் 1897 தெருக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 544 தெருக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க பட்டு வருகிறது. அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கை காரணமாக திருவிக நகர் மண்டலத்தில் தொற்று என்பது படிப்படியாக குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது 7 சதவீதமாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்று இல்லாத தமிழகமாக மாற்ற தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா கால கட்டத்தில் பொருளதார பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் எந்த மாநிலமும் இல்லாத நிலையில் இந்த கொரோனா கால கட்டத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை 44 தொழிற்நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை செய்துள்ளார்.
அதே போன்று வேளாண், கட்டுமானம், தொழில் துறை என அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருவதற்கு முதல்வரின் சீரிய நடவடிக்கையே காரணம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்வர் ஆய்வு மேற் கொள்ள செல்லும் போது அங்கு தொழிற் நிறுவனத்தினர், வேளாண் விவசாயிகள், என பலதரப்பட்டவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என கேட்டறிந்து வருகிறார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் தான் அதிக மழை பொழிவு இருக்கும்.
ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த ஜூன்1 ம் தேதி ஆக.9ம் தேதி வரை 56 சதவீதம் வரை நமக்கு கூடுதலாக மழை பொழிவு கிடைத்துள்ளது.
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மூணாறு பகுதிகளில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் வசித்து வந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமனோர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை இந்த கூட்டத்தின் மூலம் தெரிவத்துக் கொள்கிறேன்.
அதே போன்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேரள முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் மீட்கப்படும் உடல்கள் மிகுந்த சிதலமடைந்தால், அடையாளம் காணப்பட்டு அங்கேயே இறுதி சடங்கு செய்யப்படுகிறது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்து வருகிறார்,முன்பு மண்டலங்களில் இடையே சில தளர்வுகள் வழங்கப்பட்டன,
அதில் ஏற்பட்ட சிரமங்கள் உங்களுக்கு தெரியும், மக்களின் வாழ்வாதாரத்தை பொறுத்து, தேவையான தளர்வுகள் வழங்கப்படும் என்று பொது ஊரடங்கு அறிவிப்பை வெளியிடும்போதே முதல்வர் அறிவித்துள்ளார், அதன் படி ஊரகப்பகுதிகளில் இருக்கும் கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது,
இப்போது மாநகராட்சி பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள சிறு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன, உடல்பயிற்சி கூடங்கள் மற்றும் ,ஒட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, தேவையான தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது,
இ-பாஸ் விவகாரத்தை பொறுத்தவரை நடைமுறையில் சிரமங்கள் இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்வதற்காக இ-பாஸ் பெறப்பட வேண்டும், தேவைகள் இன்றி வெளிமாவட்டங்கள் செல்லக்கூடாது என்ற நோக்கத்தோடு தான் இ-பாஸ் கொண்டு வரப்பட்டது.
மருத்துவம் இறப்பு மற்றும் திருமணம் போன்றவற்றிற்காக இ-பாஸ் வழங்கப்படுகிறது. இப்போது அதனை எளிமைப்படுத்துவதற்காக வருவாய் மாவட்டங்களில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் கூறினார்.
இதைத்தொட்ர்ந்து அமைச்சர் உதயகுமாரிடம், திமுகவின் தேர்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவே இ-பாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயகுமார் திமுகவினர் எந்த பணியும் செய்யவில்லை, எங்கே தேர்தல் பணியை செய்தார்கள், முடங்கி போய் வீட்டில் தான் இருக்கிறார்ஸ்டாலின். நான் ஆளுங்கட்சியை சார்ந்தவன், அமைச்சர், நான் காழ்ப்புணர்ச்சியோடு பேசுவதாக சொல்லலாம்,
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எத்தனையோ கிலோ மீட்டர் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். ஆய்வு நடத்துகிறார் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறா.
ஆனால் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினும்செய்த பணி என்ன, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பணியை ஒப்பிட்டு பார்த்தால் ஸ்டாலினின் செய்த பணி பூஜ்யம் தான் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவிக நகர் மண்டலத்தின் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அரவிந்தன் ஐ.ஏ.எஸ்., டி.ஆர்.ஓ. அருணா, முன்னாள் எம்.பி. பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.