முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸை நாங்கள் மீண்டும் தோற்கடித்து விட்டோம்: நியூசிலாந்து பிரதமர் மகிழ்ச்சி

திங்கட்கிழமை, 5 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : மீண்டும் நாங்கள் கொரோனா வைரஸைத் தோற்கடித்துவிட்டோம் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறும்போது, கொரோனா இரண்டாம் கட்ட அலையை நாம் கட்டுப்படுத்தி விட்டோம். நாம் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸைத் தோற்கடித்து விட்டோம். இதனைத் தொடர்ந்து நாம் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்து தீவில் 100 நாட்களைக் கடந்து, கொரோனா தொற்று இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதற்காக நியூசிலாந்து மக்களுக்கும், அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கும் உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வாழ்த்துத் தெரிவித்தது. 

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம் போல் இருந்து வந்தது. 

இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.  நியூசிலாந்தில் 1,855 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 1,790 பேர் குணமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து