முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய மாநிலத்துக்குள் சி.பி.ஐ அனுமதியின்றி நுழைய தடை: உத்தவ் தாக்கரே அறிவிப்பு

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

மராட்டிய மாநிலத்துக்குள் நுழைந்து வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்டு வந்த அனுமதி திரும்பப் பெறுவதாக அம்மாநில முதல்வர்  உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். உத்தவ் தாக்கரேவின் இந்த அறிவிப்பால் இனி சி.பி.ஐ. அதிகாரிகள் தன்னிச்சையாக நுழைந்து எந்த வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள முடியாது.

மும்பை உள்ளிட்ட இடங்களில் சில தொலைக்காட்சிகள் செய்த TRP மோசடி தொடர்பான வழக்கு குறித்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டது. ஆனால் வழக்கை திடீரென உத்தரப் பிரதேச காவல்துறை சி.பி.ஐ-க்கு கொடுத்துள்ளது.  இதனைத் தொடர்ந்து மராட்டியத்தில் சிபிஐ-யின் தன்னிச்சை விசாரணைக்கு  உத்தவ் தாக்கரே தடை விதித்துள்ளார். 

மும்பையில் நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த சூழலில் தடை உத்தரவை முதல்வர் உத்தவ் தாக்கரே பிறப்பித்துள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான், மேற்குவங்க மாநிலங்கள் சி.பி.ஐ.-க்கு வழங்கி வந்த பொது இசைவை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து