முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகி மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : திருவள்ளூர் மத்திய மாவட்டம் மதுரவாயல் பகுதி அவை தலைவர் மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,  

திருவள்ளூர் மத்திய மாவட்டம் மதுரவாயல் பகுதி அ.தி.மு.க அவை தலைவர் கே. கபாலி உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

கட்சியின் மீதும், அம்மா மீதும், கட்சித் தலைமை மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால உடன்பிறப்பு கபாலியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து