முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடியார்தான் டாப். மற்றவர்கள் எல்லாம் டூப் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வர்ணனை

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : எடப்பாடியார்தான் டாப். மற்றவர்கள் எல்லாம் டூப் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வர்ணித்துள்ளார்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அண்ணா தொழிற்சங்கம் மதுரை மண்டலம் சார்பாக நீர்,மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர்பழங்கள், இளநீர், மோர், சர்பத் ஆகியவற்றை வழங்கினார். 

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க.வின் ஹீரோவான எடப்பாடியார்தான் டாப். மற்றவர்கள் எல்லாம் டூப் தான். அவர் மீண்டும் முதல்வர் ஆவதற்கு மக்கள் ஒருமனதாக முடிவெடுத்து விட்டார்கள். விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு கொண்டு அனைவராலும் ஈர்க்கப்பட்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அவர் தான் நல்லவர் வல்லவர், மேலும் ராசியானவர். குறிப்பாக அவரது ஆட்சி காலத்தில்தான் வெயில் காலத்திலும் மழை கொட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாவட்ட பொருளாளர் அண்ணாத்துரை, போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் ஜெயராஜ் மற்றும் பகுதி செயலாளர் பைக்காரா கருப்பசாமி, பெரியசெல்வம், பழங்காநத்தம் ராஜாராம், ஆட்டோ விஜயன், எஸ்.எம்.டி.ரவி, சி.ஆர்.ககிரவன், 52 - வது வார்டு பாலமுருகன், ஐ.டி.விங்க் அப்துல்காதர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து