முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 6,711 பேருக்கு கோரோனா உறுதி

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் புதிதாக 6,711 பேருக்கு கோரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9லட்சத்து,40,145ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 2,105, செங்கல்பட்டில் 611, கோவையில் 604, திருவள்ளூரில் 333, காஞ்சிபுரம் 277, திருப்பூரில் 160 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 19 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 12,927ஆக உயர்ந்துள்ளது.மேலும் 2,339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8லட்சத்து,80,910 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் 46,308 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 82,982 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.கடந்தாண்டு இதே நாளில் 106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து