முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே வீரர்கள் பத்திரமாக ஊர் சென்ற பிறகே ராஞ்சிக்கு கிளம்ப டோனி முடிவு

வியாழக்கிழமை, 6 மே 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை அணியின் அனைத்து வீரர்களும் முதலில் ஊருக்குக் கிளம்ப வேண்டும், அதன் பிறகே தான் ராஞ்சிக்குக் கிளம்புவேன் என டோனி கூறியுள்ளது ரசிகர்கள் இடையே தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து வீரர்கள்...

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐ.பி.எல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற 11 இங்கிலாந்து வீரர்களில் 8 பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்கள். 

சென்னை கேப்டன்...

ஐ.பி.எல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு அணியிலிருந்தும் வீரர்கள் தங்கள் ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் சென்னை அணி கேப்டன் டோனி இன்னும் ராஞ்சிக்குக் கிளம்பாமல் உள்ளார்.

கடைசி ஆளாக...

ஐ.பி.எல் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. வெளிநாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் இதர நிர்வாகிகளும் ஊருக்குச் செல்வதற்காக விமானங்களில் அவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு இந்திய வீரர்கள் கிளம்ப வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குச் சென்ற பிறகு கடைசி ஆளாக நான் கிளம்புவேன் என சென்னை அணியினருடனான இணைய உரையாடலில் டோனி கூறியதாக சென்னையைச் சேர்ந்த ஒரு வீரர் ஆங்கில ஊடகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

தனி விமானத்தில்... 

டெல்லியிருந்து தனி விமானத்தில் வீரர்களை அனுப்பும் பணியில் இறங்கியுள்ளது சென்னை நிர்வாகம். 10 இருக்கைகள் கொண்ட தனி விமானம் சென்னை அணியினரை ஏற்றிக்கொண்டு முதலில் ராஜ்கோட்டுக்கும் பிறகு மும்பைக்கும் சென்றுள்ளது. நேற்று முன்தினம் மாலையில் மற்றொரு தனி விமானம் வீரர்களை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கும் சென்னைக்கும் சென்றுள்ளது. நேற்று மாலை அனைத்து வீரர்களும் கிளம்பிய பிறகு தனி விமானத்தில் இன்று ராஞ்சிக்குச் செல்கிறார் டோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து