முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: விமர்சித்த சர்வதேச பத்திரிகைகளுக்கு ஆஸி. வீரர் மேத்யூ ஹைடன் கண்டனம்

வியாழக்கிழமை, 20 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி : கொரோனா விவகாரத்தில்  இந்திய அரசை விமர்சனம் செய்த சர்வதேச பத்திரிகைகளுக்கு மேத்யூ ஹைடன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலையில் சிக்கித்தவித்து வரும் இந்தியாவின் இந்த துயர நிலைக்கு காரணம் இந்திய அரசின் மெத்தனபோக்குதான் என சர்வதேச பத்திரிகைகள் விமர்சித்து செய்தி வெளியிட்டிருந்தன. அதற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன். 

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை ஐ.பி.எல். அணிக்காக விளையாடியவருமான மேத்யூ ஹைடன் தெரிவிக்கையில்.,

எளிதானது இல்லை

கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதை அறியாமல் சில சர்வதேச ஊடகங்கள் அவர்கள் விருப்பம் போல் விமர்சித்து வருகின்றன. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதில் நிறைய சவால்கள் உள்ளன. 

மரியாதை அதிகம் 

இந்தியா முழுவதும் நான் பயணித்திருக்கிறேன். குறிப்பாக தமிழகத்தை எனது ஆன்மிக இல்லமாகவே நான் கருதுகிறேன். இவ்வளவு பெரிய நாட்டை வழிநடத்தி வரும் தலைவர்கள் மீது எப்போதுமே எனக்கு மரியாதை அதிகம் உண்டு. 

மனம் கனக்கிறது...

இந்தியாவில் நான் செல்லும் இடமெல்லாம் அங்குள்ள மக்கள் என் மீது அன்பு செலுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்திய மக்கள் தற்போது சிக்கியுள்ள இந்த அவல நிலையை கண்டு எனது மனம் கனக்கிறது” என ஹைடன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து