முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனியை கடவுளாக பார்ப்பவர்

வியாழக்கிழமை, 17 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இந்தியா டிவியில் பேசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிதீஷ் ராணா "டோனியை மிகவும் வியந்து பார்ப்பார் ரிஷப் பன்ட். அவர் தூங்கி கண் விழிக்குப்போது பார்க்கும் நபராக டோனி இருக்க வேண்டும் என விரும்புவார்.

இது குறித்து என்னிடமே பல முறை கூறியிருக்கிறார். மேலும் டோனியுடன் தன்னை ஒப்பிடுவது சரியல்ல என்றும், தான் அதற்கு தகுதியானவர் இல்லை எனவும் பலமுறை கூறியிருக்கிறார். இந்த ஒப்பீட்டை நிறுத்த வேண்டும் என்றும் டோனி தனக்கு கடவுள் போன்றவர் எனவும் சொல்லியிருக்கிறார்" என்றார்.

மேலும் பேசிய நீதிஷ் ராணா "ரிஷப் பன்ட்டின் மிகப்பெரிய பலம் அவருடைய தன்னம்பிக்கை. எந்த பார்மெட்டில் விளையாடினாலும் அவருடைய ஆட்டத்தை அவர் கைவிடுவதில்லை. அவர் மீது விமர்சனம் எழுந்தபோது மிகவும் பொறுமை காத்தார். மேலும் இந்தியாவின் வெற்றிக்காக ஒரு இன்னிங்ஸ் விளையாடுவேன்,

அது என் வாழ்க்கையை மாற்றும் என திடமாக நம்பினார். அதனை 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்திலேயே ரிஷப் பன்ட் செய்து காட்டிவிட்டார். அதுதான் ரிஷப் பன்ட்டின் பலம்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து