எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சார்ஜா: பேட்டங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜேசன் ஹோல்டரின் முயற்சி ஐதராபாத் அணிக்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை. பஞ்சாப் அணியுடனான தோல்வியால் ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். இனி வரும் போட்டிகளில் வெற்றிப் பெற்றாலும் அந்த அணிக்கு பயனில்லை.
37-வது லீக் ஆட்டம்...
ஐ.பி.எல் 2021 சீசனுக்கான 37-வது லீக் ஆட்டம் சார்ஜா மைதானத்தில் நடந்தது இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அதகளப்படுத்தினார். இருப்பினும் ஐதராபாத் அணியால் போட்டியை வெல்ல முடியவில்லை.
ஐதராபாத் பந்துவீச்சு...
டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் என இரு முக்கிய பேட்ஸ்மென்களையும் தன் 4-வது ஓவரில் வீழித்தி பெவிலியன் அனுப்பினார் ஜேசன் ஹோல்டர்.
125 ரன்கள்...
அடுத்து வந்த க்ரிஸ் கெயிலை ரஷீத் கானும், கொஞ்சம் பஞ்சாப் அணியின் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்துக் கொண்டிருந்த ஏய்டன் மக்ரமை அப்துல் சமத்தும் வீழ்த்தினர்.பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களான நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோரையும் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் நிலை பெறவிடாமல் வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே குவித்திருந்தது பஞ்சாப்.
3 விக்கெட்கள்...
ஐதராபாத்தின் பந்துவீச்சாளர்களில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களுக்கு 19 ரன்களை மட்டும் கொடுத்து கே எல் ராகுல், மயங்க் அகர்வால், தீபக் ஹூடா என 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், அப்துல் சமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆரம்பமே சொதப்பல்...
126 ரன்களைக் குவித்தால் வெற்றி என்கிற எளிய இலக்கோடு களமிறங்கிய ஐதராபாத்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களான டேவிட் வார்னர் (2 ரன்கள்), கேன் வில்லியம்சன் (1 ரன்), ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். கடந்த முறை டெல்லிக்கு எதிரான போட்டியிலும் டேவிட் வார்னர் வெகு சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
விரித்திமான்...
விரித்திமான் சாஹா மட்டுமே 37 பந்துக்கு 31 ரன்களை அடித்து ஐதராபாத் அணியை நிலை பெறச் செய்தார். மணீஷ் பாண்டே (13 ரன்கள்) , கேதர் ஜாதவ் (12 ரன்கள்), அப்துல் சமத் (1 ரன்) ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் நிலைபெற்று ரன் குவிப்பில் இறங்கவில்லை.
பேட்டிங் அபாரம்...
14-வது ஓவரில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் தான் ஐதராபாத்தின் ரன் ரேட்டை அதிகரிக்கத் தொடங்கினார். 29 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடக்கம். கடைசி வரை தன் விக்கெட்டையும் பறிகொடுக்காமல் விளையாடி ஐதராபாத்தை ஒரு கெளரவமான ஸ்கோருக்கு நகர்த்தினார் ஜேசன் ஹோல்டர்.
120 ரன்கள் மட்டுமே...
ஐதராபாத்தின் பேட்ஸ்மென்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் நிறைய பந்துகளையும் வீணடித்தனர். இந்த போட்டியில் ஜேசன் ஹோல்டர், கேதர் ஜாதவ் தவிர ஐதராபாத் அணியில் யாருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் 85 சதவீதத்துக்கு மேல் இல்லை. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஐதராபாத்தால் 120 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.
பஞ்சாப் வெற்றி...
இறுதியில், ஐதராபாத் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹோல்டர் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.
மொகமத் ஷமி...
பஞ்சாபின் அனுபவமிக்க பந்துவீச்சாளரான மொகமத் ஷமி, டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சனின் விக்கெட்டுகளை வீழ்த்தி டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை பெவிலியன் அனுப்பினார். மணீஷ் பாண்டே, கேதர் ஜதவ், அப்துல் சமத் என ஐதராபாத்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களை பிட்சிலிருந்து வெளியேற்றினார் ரவி பிஷ்னோய்.
பஞ்சாப் பந்துவீச்சு...
ராஜஸ்தான் உடனான போட்டியில் 5 விக்கேடுகளை வீழ்த்திய அர்ஷ்தீப், இப்போட்டியில் விரித்திமான் சாஹாவின் விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாபின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தார். 125 என்கிற குறைந்த ஸ்கோரை மட்டுமே அடித்திருந்தாலும், அதை திறம்பட டிஃபெண்ட் செய்ததில் பஞ்சாபின் இந்த மூன்று பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
குறைந்த ஸ்கோர்...
ஷார்ஜாவில் அடிக்கப்பட்ட மிகக் குறைவான ஸ்கோர், அந்த குறைவான ஸ்கோரையும் சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்த முதல் அணி சன்ரைசர்ஸ் அணியாகும்.
5-வது இடத்தில்...
இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்திருக்கிறது. ஐதராபாத் அணி கடைசி இடத்திலேயே தொடர்கிறது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இதுவரை 10 போட்டிகளில் 4 வெற்றிகள், 6 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.
BOX - 1
வெளியேறியது சன்ரைசர்ஸ்
சன்ரைசர்ஸ் அணிக்கு கடந்த 9 போட்டிகளில் இது 8-வது தோல்வியாகும். ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பிலிருந்து சன்ரைசர்ஸ் அணி வெளியேறிவிட்டது. இனிமேல் அடுத்துவரும் போட்டிகள் அனைத்திலும் வென்றாலும் ப்ளே ஆஃப் செல்வது கடினம். இனிவரும் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி பெறும் வெற்றிகள் எந்த விதத்திலும் உதவாது, ஆனால், மற்ற அணிகளின் ப்ளேஆஃப் சுற்றைப் பாதிக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.