எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதல் உலக நுரையீரல் கிருமி தொற்று தினம் 2009- ல் அனுசரிக்கப்பட்டது. இவ்வாண்டு 13-ம் உலக நுரையீரல் கிருமி தொற்று தினம் இன்று 12-ம் தேதி உலகம் ழுமுவதும் அனுசரிக்கப்படுகிறது. நுரையீரல் பல வகை தொற்று கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்றவகை பல வகை நுரையீரல் கிருமி தொற்றை உண்டாக்குகிறது. உலகளவில் 2019-ம் ஆண்டு 25 லட்சம் உயிர்களை பரித்திருக்கிறது. அதில் 6,72,000 குழந்தைகள் ஆகும். உலகளவில் ஒவ்வொரு வருடமும் 8 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் பரிந்துரைப்படி ஒவ்வொரு வருடமும், நிமோனியா தினம் அனுசரிப்பதின் மூலம் நிமோனியாவின் தாக்கம், மருத்துவ முறைகள், தடுப்பு முறைகள் பற்றி விழப்புணர்வு ஏற்படுத்த முடியும். மேலும் 2030-ம் ஆண்டுக்குள் நிமோனியாவினால் ஏற்படும் குழந்தைகளின் உயிரிழப்புக்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.
ஐந்து வயதுற்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு முதல் காரணம் நுரையீரல் கிருமி தொற்று ஆகும்.ஒவ்வொரு நிமிடமும் நுரையீரல் கிருமி தொற்றால் 2 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். மொத்த குழந்தைகள் உயிரிழப்பில் 10 சதவிகித உயிரிழப்புக்காரணம் நுரையீரல் கிருமி தொற்றே ஆகும். இந்தியாவில் 2015-ல் மட்டும் 5 கோடி குழந்தைகள் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா நோயாளிகளில் 23 சதவிகிதம் இந்திய குழந்தைகள் ஆகும். ஏற்கனவே அதிகபடியாக இருக்கும் நிமோனியா நோய்களில் சில நிமோனியாவை இந்தியா சுகாரதாரத்துறை முயற்சியால் குறைந்து வந்தாலும் பன்றிக்காய்ச்சல், கொரோனா கிருமி போன்றவை பெரும் பாதிப்பை எற்படுத்துவது influenza மனிதகுலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பல வகை பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, நுரையீரல் தொற்றை ஏற்படுத்துகிறது. ஸ்டெரப்டோகாகஸ் நிமோனியா தான் அதிகபடியான நுரையீரல் கிருமி தொற்றை ஏற்படுத்துகிறது அதனை தொடர்ந்து மைகோப்லாஸ்மா நிமோனியா, ஈமோபிளஸ் இன்புலுன்சா போன்ற பாக்டீரியாக்கள் அதிகப்படியான நுரையீரல் கிருமி தொற்றை ஏற்படுத்துகிறது.
மேலும் பாக்டீரியாக்களில் காசநோய் அதாவது மைக்கோ பாக்டீரியம் டீயூபர்குலே இந்தியாவில் பேரிழப்பை ஏற்படுத்துகிறது. வைரஸ்களில் இன்புலுயன்ஸா, கொரோனா, ரெஸ்பிரேட்டரி, சின்;சியல் வைரஸ், பாராஇன்புலுயன்ஸா, அடினோ வைரஸ் போன்றவை நுரையீரலைத் தாக்குகிறது. பூஞ்சைகளில் ஆஸ்பர்ஜிலஸ், நிமோஸிடில் காரிணி, காண்டிடா போன்றவை நுரையீரல் தொற்றை உண்டாக்குகிறது.
பெரும்பாலும் நிமோனியா காற்றின் மூலம் அதாவது நோய் உள்ளவர்கள் இருமும் பொழுது அக்கிருமி சளிதுகள்கள் மூலம் மற்றவர்களுக்கு காற்றின் மூலம் அதை சுவாசிக்கும் பொழுது நுரையீரலுக்குள் சென்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அனைவருக்கும் இப்பாதிப்பு ஏற்படுவதில்லை. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயதினர், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று எளிதாக ஏற்படுத்தி நோயாகிறது.
நிமோனியாவால் அனைத்து வயதினரும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் எதிர்ப்புரதச்சத்து குறைவாக இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் பாதிப்படைகின்றனர். சக்கரைநோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், எச்.ஐ.வி, ஏற்கனவே நுரையீரல் நோய் உள்ளவர்கள் இருதய நோய் உள்ளவர்கள் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறையும் மருந்துகள் உண்பவாகளுக்கு நிமோனியா தாக்கம் எளிதாக உருவாகும்.
காய்ச்சல், உடல் சோர்வு, நெஞ்சுவலி, சளி, சளியில் இரத்தம், மூச்சுத்திணறல் போன்றவை ஆகும். மற்றும் கிருமி தொற்று முறையான மருத்துவம் செய்யவிட்டால் மற்ற உறுப்புக்களான மூனை, சிறுநீரகம், போன்றவையை தாக்கி பல்வேறு அறிகுறிகள் உண்டாக்கும். நெஞ்சுபடம், சளிபரிசோதனை, இரத்தப்பரிசோதனை நீர்ப்பரிசோதனை மூலம் கண்டறியலாம். சளி, இரத்தம், சிறுநீர் போன்றவையில் கிருமி தொற்றை (கிருமியை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருந்தையும் கண்டறிய முடியும்).
பாதிப்பு உண்டாக்கிய கிருமியை கண்டறிவதன் மூலம் அதற்கு தகுந்த மருந்துகள் அதாவது ஆண்டிபாயாடிக், ஆண்டி வைரஸ், ஆண்டிபங்கல் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். குறைந்தபட்சம் ஒருவராம் முதல், இரண்டு வாரம் வரை மேலும் (காச நோய்) கிருமிக்கு ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரை மருத்துவம் தேவைப்படும்.
2018 -ல் மட்டும் உலகளவில், இந்நோயினால் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு இலட்சம் உயிரிழப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 2016-ல் இந்தியாவில், இந்நோயினால் 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த உலக காசநோயாளிகளில் நான்கில் ஒருபங்கு இந்தியாவிலே உள்ளனர். 2016-ல் இந்தியாவில் மட்டும் காசநோய் 4 லட்சம் உயிரிழப்பை உண்டாக்கி இருக்கிறது.காசநோய் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் எனும் கிருமியினால் உருவாகிறது இக்கிருமியும் நோயுள்ளவர் இருமும் பொழுது, சளிதுகள்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. நெஞ்சு கபடம் சளி பரிசோதனை மூலம் கண்டறியலாம். காசநோய் மருத்துவம் ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரை கொடுக்கப்படும்.
இன்புலுயன்சா நோயின் அறிகுறிகள் இருமல், காய்ச்சல், சளி, சளியில் இரத்தம் எடைகுறைதல், பசியின்மை போன்றவை ஆகும். இதுவும் ஒரு நுரையீரல் பெருந்தொற்றாகும். 1918, 1957 - 58, 1968 - 1969, 2009 ஆகிய ஆண்டு உலகளவில் பெரும்பாதிப்பை உண்டாக்கியது. 2009 உலகளவில் பன்றிக்காய்ச்சலால் 28010 மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவில் 1833 மக்கள் உயிரிழந்தனர். 2009 -2010, 36,247 மக்கள் இக்கிருமியினால் பாதிக்கப்பட்டனர். பின்னர் இதன் பாதிப்பு ஒவ்வொரு வருடமும்; தொடர்ந்து இந்தியாவில் இருந்து கொண்டே இருக்கிறது. 2012 - 2019 காலத்தில் மொத்தம் 138, 394 பேர் இந்த பன்றி காய்ச்சலால், பாதிக்கப்பட்டு, 9180 மக்கள்உயிரிழந்துள்ளனர். இதுவும் காற்றில் பரவி கொரோனா போல் நுரையீரல் தொற்றை உண்டாக்குகிறது. இருமல், சளி, மூச்சுத்திணறல், உடம்பு வலி போன்றவை இந்நோயின் அறிகுறியாகும். எனினும் இதற்கு தடுப்பூசிகள் மூலம் இதன் பாதிப்பை குறைக்க முடியும். தொண்டை சளி RT PCR எனும் பரிசோதனை மூலம் கண்டறிப்படுகிறது. நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாக்க தூய காற்றை சுவாசிக்க வேண்டும். முடிந்தளவு புகை, மாசுக்காற்று உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு நாட்டிலும், நாட்டிற்கு உள்ள தொற்று நோய்கள் ஏற்ப, தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சத்துமிக்க ஊட்டசத்து நிறைந்த உணவுகள் மூலம் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும். நடைபெயர்ச்சி, உடற்பயிற்சி செய்தல் மூலம் நுரையீரல், இதயம் செயல்பாடு மேம்படும். நீரழிவு நோய், இருதய நோய், உடல்பருமன், சிறுநீரக செயல்பாடு குறைதல், கல்லீரல் செயல்பாடு குறைதல் போன்றவை நுரையீரல் நோய்களை உண்டாக்க வாய்ப்புள்ளது.
ஆஸ்துமா,அலர்ஜிக் ரைனைடிஸ் உள்ளவர்கள், ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை கண்டறிந்து அதை தவிர்த்து கொள்வது மகத்தான முறையாகும். நுரையீரல் தொற்று நோய்களை தவிர்க்க மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
டாக்டர் P. பிரேம் ஆனந்த், முதன்மை அலர்ஜி, ஆஸ்துமா, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் இணை பேராசிரியர் செல் : 9940903555
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.