முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிமுக்தா நதி அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா நதி அணையில் இருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து, பாசனத்திற்கு இன்று முதல் 24.11.2021 முதல் 10.02.2022 வரை   79 நாட்களுக்கு  மொத்தம் 550.75 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 4250 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து