எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிருப்தி தலைவர்களுடன் சோனியா, ராகுல் சந்திப்பு எதிரொலியால், காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் வருமா என் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி பதவி விலகினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து காங்கிரசின் மூத்த தலைவர்கள் கட்சி மேலிடம் மீது அதிருப்தி அடைந்தனர். அவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இதையடுத்து ஜி-23 என்று அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் கட்சியை மறுசீரமைக்க கட்சியின் அமைப்பு தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். நேரு குடும்பத்தை சேராத வேறு ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் வீட்டில் அதிருப்தி தலைவர்கள் ஒன்று கூடி விவாதித்தனர்.
இந்த கூட்டத்தில் சோனியா காந்திக்கு நெருக்கமான பிருத்விராஜ் சவான், அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடே, ராஜ்பப்பர், மணிசங்கர் அய்யர், குரியன், குல்தீப்சர்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் கூறும்போது அனைத்து மாநிலத்தையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் கூட்டுத் தலைமையை பின்பற்றுவதே காங்கிரஸ் கட்சியை முன்னோக்கி எடுத்து செல்லும் ஒரே வழி என அவர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து குலாம் நபி ஆசாத், சோனியா காந்தியிடம் விளக்கி கூறினார்.
இந்த சூழ்நிலையில் அதிருப்தியாளர்கள் குழுவை சேர்ந்த பூபிந்தர்சிங் ஹூடாவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது கட்சியில் மறுசீரமைப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பூபிந்தர்சிங் ஹூடா, குலாம்நபி ஆசாத் மற்றும் அனந்த்சர்மா, கபில் சிபல் ஆகியோரை சந்தித்து ராகுல் காந்தியிடம் பேசியது குறித்து விவாதித்தார்.
இப்படி காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து நடைபெறும் இந்த சம்பவங்களுக்கு மத்தியில் 5 மாநில தேர்தல் குறித்து ஆராய 5 மூத்த தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்துக்கு ஜிதேந்தர்சிங்கும், உத்தரகாண்ட்டில் அவுனாஷ் பண்டேகரும், கோவாவுக்கு ரஜனி பாட்டிலும், மணிப்பூருக்கு ஜெய்ராம் ரமேஷ், பஞ்சாப்புக்கு அஜய் மக்கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த மாநிலங்களில் அமைப்பு ரீதியான மாற்றங்களை செய்யுமாறு சோனியா காந்தி அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களை டெல்லியில் சோனியா காந்தி சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து கேட்டறிந்தார். அதற்கு எம்.பி.க்கள் உள்கட்சி பிரச்சினையாலும், தலைவர்களின் ஒழுங்கீனமான செயல்களாலும் இந்த தோல்வி ஏற்பட்டதாக கூறினார்கள். உத்தரபிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளை கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனித்தனியாக சந்தித்து பேசினார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது ஏன் என்பது குறித்து அவர் எல்லோரிடமும் கேட்டறிந்தார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலை பொறுத்தவரை 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தோல்வி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் பாராளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் சூழ்நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தி தலைவர்களையும் சந்திக்க சோனியாகாந்தி முடிவு செய்துள்ளார். அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், நேற்று சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது அவர் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், தாங்கள் எடுத்துள்ள பரிந்துரைகள் குறித்தும் விளக்க உள்ளார். இதனால் விரைவில் காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்