முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பு

திங்கட்கிழமை, 2 மே 2022      இந்தியா
Aam-Aadmi 2022 05 02

Source: provided

புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சதா, அசோக் மிட்டல், தொழிலதிபர் சஞ்சீவ் ஆரோரா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பொறுப்புக்கு  போட்டியிட்டு  வெற்றி பெற்றனர்.  ராகவ் சதா உள்ளிட்ட மூன்று பேருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவைத் தலைவர் அறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

மூவருக்கும் மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமன வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் ரஜ்யசபாவில் விதிகள் குறித்த உறுப்பினர்கள் கையேடு, விதிகள் புத்தகம் ஆகியவற்றை படித்து அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து