முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 2 நாள் சுற்றுப்பயணம்: கல்வானில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு ராஜ்நாத் அஞ்சலி

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      இந்தியா
Rajnath-Singh-2022-06-16

காஷ்மீருக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு மந்திரி ராணுவ வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். அவர் கல்வானில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நாட்டின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர், ராணுவ வீரர்களின் முகாம்களுக்கு சென்று அவர்களுடன் உரையாடினார். இன்று நடைபெற உள்ள மகாராஜா குலாப் சிங்கின் 200வது ஆண்டு முடிசூட்டு விழாவில் கலந்து கொள்கிறார். 

இதற்காக காஷ்மீர் சென்ற அவர் பாராமுல்லா பகுதியில் உள்ள வீரர்களுக்கான நினைவகத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படமும் எடுத்து கொண்டார். அதன்பின், பராகானா பகுதிக்கு செல்வதற்காக பாராமுல்லா நகரில் மலை பிரதேசம் உள்ளிட்ட அனைத்து நிலையிலான தரை பகுதிகளிலும் பயணிக்கும் திறன் கொண்ட ராணுவ வாகனம் ஒன்றை அவரே ஓட்டி சென்றார். 

கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு எதிரான போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, காஷ்மீரில் அமைக்ககப்பட்டுள்ள நினைவு இடத்தில் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் மதிய உணவு சாப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து