எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடந்து வரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நாளை 7-ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து வரும் 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வே.ரா. சமீபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இத்தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறக் கூடிய முதல் இடைத்தேர்தலாக இருப்பதால் இது தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தி.மு.க. கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார். அவரை தொடர்ந்து சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தன், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் ஆகியோர் மனு தாக்கல் செய்து விட்டனர்.
இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்து விட்டார். ஆக, மனு தாக்கல் செய்ய வேண்டிய ஒரே கட்சியாக தற்போது அ.தி.மு.க. உள்ளது. அனேகமாக அ.தி.மு.க. வேட்பாளர் வரும் 7-ம் தேதி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் நாளை 7-ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 46 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் மனு தாக்கல் நடைபெறவில்லை. இன்றும், நாளையும் மனு தாக்கல் நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். மறுநாள் 8-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற 10-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மனுக்கள் வாபஸான பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-03-2025.
13 Mar 2025 -
வரும் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார் டி.கே. சிவகுமார்
13 Mar 2025பெங்களூரு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் டி.கே. சிவகுமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு
13 Mar 2025சென்னை, தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு
13 Mar 2025சென்னை, தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெறவுள்ளது.
-
ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விடுவித்து இஸ்ரோ சாதனை
13 Mar 2025புதுடெல்லி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது ஸ்பேடெக்ஸ் பரிசோதனையின் ஒரு பகுதியாக இரண்டு செயற்கைக் கோள்களை விடுவிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிறைவே
-
த.வெ.க. வில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 140ஆக உயர்த்த விஜய் முடிவு?
13 Mar 2025சென்னை, த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 120ல் இருந்து 140ஆக உயர்த்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்க ரேவந்த் ரெட்டி முடிவு
13 Mar 2025புதுடில்லி, தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்... ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
13 Mar 2025வாஷிங்டன், சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்
-
டெல்லியில் பிரிட்டன் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
13 Mar 2025புதுடெல்லி, டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரிட்டன் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இ.பி.எஸ். உடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்: அமைச்சர் ரகுபதி
13 Mar 2025சென்னை, இ.பி.எஸ். அழைத்தால் நானே ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்..
-
புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
13 Mar 2025புதுச்சேரி, அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
தனியார் பால், தயிர் விலை உயர்வு: விலை உயர்வை உடனே திரும்பப்பெற பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்
13 Mar 2025சென்னை, விலை உயர்வை திரும்பப் பெற பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
-
கேரளாவில் துஷார் காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போராட்டம்
13 Mar 2025திருவனந்தபுரம், கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
-
கியூட் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள்: தேசிய தேர்வு முகமை வெளியிட்டது
13 Mar 2025புதுடில்லி, முதுகலை பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு (கியூட்) க்கான முக்கிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.
-
1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு
13 Mar 2025சென்னை, தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
-
வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
13 Mar 2025சென்னை, வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சத்துணவு ஊழியா்களின் தணிக்கை தொகை ரூ.257 கோடி தள்ளுபடி: தமிழக அரசு உத்தரவு
13 Mar 2025சென்னை, சத்துணவு மைய ஊழியா்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டிய ரூ.257.83 கோடிக்கான தணிக்கைகளை முழுமையாகத் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  
-
ரெயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது: தமிழக அரசு விளக்கம்
13 Mar 2025சென்னை, ரெயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு பணிகளை விரைந்து முடிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மின்சார ஆட்டோக்களை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
13 Mar 2025சென்னை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
-
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு
13 Mar 2025மதுரை, கரூர் கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளத
-
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
13 Mar 2025சென்னை, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள
-
முதல்முறை தமிழகத்தில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது ஏன்..?
13 Mar 2025சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு
13 Mar 2025சென்னை: தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
வட நாட்டவர்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்தால் சலசலப்பு
13 Mar 2025வேலூர், தமிழ்நாடு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் பேசியதை கண்டித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் சோக சம்பவம்: 5 கோடி ரூபாய் கடன் தொல்லையால் மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை
13 Mar 2025சென்னை, சென்னை அண்ணாநகரில் மருத்துவர் அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.