முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி : சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
EVKS 2023-03-16

Source: provided

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. உயிரிழந்ததை தொடர்ந்து அந்த சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். அதனையடுத்து டெல்லி சென்று மல்லிகர்ஜுனா கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். 

இதையடுத்து அவருக்கு கடந்த 15-ம் தேதி இரவு திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லேசான தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை அறிவித்துள்ளது. மேலும் உடல் நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து