எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியா விடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வீதி உலாவின் போது சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் அடித்தபடி செல்வது பொதுமக்களை பரவசம் அடையச் செய்கிறது. மீனாட்சி அம்மன் பட்டா பிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று முன்தினம் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர். மீனாட்சி அம்மனுக்கு மங்கலநாண் அணிவிக்கப்பட்டதும் அங்கு கூடி யிருந்த பெண்கள் தங்களது தாலியை புதுப்பித்துக் கொண்டனர். தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன் றவையும் நடைபெற்றன.
சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
நேற்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியா விடை-சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகா ராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
அதன்பிறகு பிரியாவிடை-சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். காலை 5.15 மணிக்கு மேல் 5.40 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து சுவாமி - அம்மன் தேரை இழுத்துச் சென்றனர். 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி செல்வதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர்.
தேருக்கு முன்பாக பக்தர்கள் மீனாட்சி - சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர். சுவாமி - அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது. அதன்பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர்.
பகல் 11.30 மணியளவில் மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது. தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதை கருத்தில் கொண்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். திருவிழாவை காணவரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்படுத்தினர். தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வந்தனர்
அதை தொடர்ந்து உச்சி காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-03-2025.
11 Mar 2025 -
தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் : இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது
11 Mar 2025சென்னை : தாம்பரம்-திருச்சி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
-
தங்கம் விலை குறைந்தது
11 Mar 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 11) சவரனுக்கு ரூ. 240 குறைந்து விற்பனையானது.
-
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் 14-ந்தேதி திறப்பு
11 Mar 2025திருவனந்தபுரம் : பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
-
கூகுளைவிட 10 லட்சம் மடங்கு வேகம்: புதிய கணினியை அறிமுகம் செய்த சீனா
11 Mar 2025சீனா : கூகுளைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக கணினியை அறிமுகம் செய்த சீனா.
-
அ.தி.மு.க. வழக்கறிஞர் மீதான தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
11 Mar 2025சென்னை, வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. -வினர் மீது நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
11 Mar 2025புதுடில்லி : என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 
-
போப் பிரான்சிஸ் நலம்பெற்று வருகிறார்: வாடிகன் தகவல்
11 Mar 2025ரோம் : போப் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து படிப்படியாக நலம்பெற்று வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
-
டெல்லி அணி கேப்டன் பதவியை நிராகரித்தார் கே.எல். ராகுல்?
11 Mar 2025புதுடில்லி : டெல்லி அணியின் கேப்டன் பதவியை கே.எல். ராகுல் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.எல். ராகுல்...
-
வரும் 14-ம் தேதி தொடங்கும் கச்சத்தீவில் அந்தோணியார் விழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
11 Mar 2025ராமேசுவரம் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழானையோட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
சிறந்த ஒருநாள் இந்திய அணியை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்
11 Mar 2025மும்பை : இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
-
ரவீந்திர ஜடேஜா 'கம்பேக்கை' புஷ்பா பட பாணியில் அறிவித்த சி.எஸ்.கே. நிர்வாகம்
11 Mar 2025சென்னை : ஜடேஜா அணியில் இணைந்ததை 'புஷ்பா' பட ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு சி.எஸ்.கே.நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டி...
-
சஸ்பெண்ட்டை ரத்து செய்த விளையாட்டு அமைச்சகம்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு போட்டிகளை நடத்த அனுமதி
11 Mar 2025புதுடெல்லி : இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நேற்று (மார்ச் 11) ரத்து செய்துள்ளது.
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை : பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
11 Mar 2025புதுடில்லி : மதுரை மற்றும் கோயம்புத்தூா் மெட்ரா ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமா்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் 
-
ஜென்டில்வுமன்’ விமர்சனம்
11 Mar 2025சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கணவர் ஹரி கிருஷ்ணனுடன் வசிக்கும் லிஜோமோல் ஜோஸ், தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துக் கொள்கிறார்.
-
மர்மர் விமர்சனம்
11 Mar 2025அமானுஷ்ய சக்தி இருப்பதாக சொல்லப்படும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு
-
கோவில் திருவிழாக்களை எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது: சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டம்
11 Mar 2025சென்னை, தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்த வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
ஜெயவேல் முருகன் இயக்கியுள்ள வருணன்
11 Mar 2025இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயவேல் முருகன் டைரக்டு செய்துள்ள படம் 'வருணன்'.
-
தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
11 Mar 2025புதுடெல்லி, மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
-
எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்: உக்ரைன் மீது மஸ்க் குற்றச்சாட்டு
11 Mar 2025வாஷிங்டன் : எக்ஸ் சமூக வலைதளம் முடக்கத்திற்கு காரணம் உக்ரைன்னா என்று எலான் மஸ்க் குற்றச்சாட்டியுள்ளார்.
-
எமகாதகி விமர்சனம்
11 Mar 2025அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என்று மகிழ்ச்சியான குடும்பத்தோடு வாழும் நாயகி ரூபா கொடவையூர், ஒருநாள் தனது அப்பா கோபத்தில் திட்டி அடித்ததை தாங்கிக் கொள்ளாமல் தூக்கிட்டு தற்
-
குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்
11 Mar 2025புதுடெல்லி, குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் தாக்கல் செய்தார். .
-
நீண்டகால அமைதி, பொருளாதார உறவுகள்: சவுதி அரேபிய இளவரசருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
11 Mar 2025கீவ் : நீண்டகால அமைதி, இருதரப்பு பொருளாதார உறவுகள் பற்றி சவுதி அரேபிய இளவரசருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
-
கிரீன்லாந்தில் தேர்தல்: அமெரிக்காவுடன் இணைய வாக்காளர்கள் விருப்பம்..?
11 Mar 2025அமெரிக்கா : கிரீன்லாந்து வாக்காளர்கள் பலரும் அமெரிக்காவுடன் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக சமீபத்திய கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
-
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம்: சென்னை வருகிறார் நவீன் பட்நாயக்; தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தகவல்
11 Mar 2025புவனேஸ்வர் : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பிஜு ஜனதா தள கட்சித் தலைவரும் ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் பங்கேற்க உறு