எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Vijay--1 2024-06-28](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/06/28/Vijay--1_2024-06-28.jpg?itok=O0a3RzNW)
Source: provided
சென்னை : தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது, ஒரு பெற்றோராக, தலைவராக எனக்கே அச்சமூட்டுகிறது என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சி இந்திய அளவில் மிகுந்த பாராட்டைப் பெற்றது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார். தொடர்ந்து சினிமா, அரசியல் என பயணப்பட்டு வரும் அவர் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ஆம் ஆண்டாக மாணவ, மாணவியர்களை கவுரவித்து வருகிறார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்க அதிகாலையிலேயே விஜய் வருகை தந்தார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "எதிர்கால சந்ததிகளான மாணவ, மாணவியரை சந்திப்பதில் மகிழ்ச்சி. சாதனை படைத்த மாணவர்களை பார்க்கும் போது புதிய உத்வேகம் கிடைக்கிறது. அது இன்று (நேற்று) காலை முதல் எனக்குள் வேலை செய்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோரும் அடுத்த ஒரு கட்டம், உங்கள் கேரியரை தேர்வு செய்யும் நிலைக்கு செல்கிறீர்கள்.
உங்களில் சிலருக்கு அடுத்த நிலை பற்றிய தெளிவான முடிவு இருக்கும். சிலருக்கு குழப்பம் இருக்கும். எல்லா துறைகளும் நல்ல துறைகள்தான். நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதில் நீங்கள் 100 சதவிகிதம் உழைப்பு போட்டால் வெற்றி நிச்சயம். இதுதொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசுங்கள்.
தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் மட்டும் நல்ல படிப்புகள் என்று சொல்லிவிட முடியாது. உலக அளவில் துறை சார்ந்த சிறந்தவர்கள் இருக்கிறார். தற்போது நமக்கு நல்ல தலைவர்கள்தான் தேவை. நான் அரசியல் ரீதியாக மட்டும் சொல்லவில்லை. படிப்பு துறைகள் ரீதியாகவும் சொல்கிறேன். எதிர்காலத்தில் அரசியலும் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் துறை ரீதியான தேர்வாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டுமா? வேண்டாமா?. நன்கு படித்தவர்கள் தலைவராக வர வேண்டுமா? வேண்டாமா?. இப்போதைக்கு படியுங்கள், மீதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது தொடர்கதை அல்ல.
படிக்கும்போது நீங்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபடலாம். ஒரு செய்தியை தகவல் வேறு, கருத்து வேறு என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். சோசியல் மீடியாவில் சிலர் புரளி பேசுகிறார்கள். அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள். நல்லவர்களை கெட்டவர்கள் போலவும், கெட்டவர்களை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள். வரும் செய்திகளில் எது உண்மை, எது பொய் என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பது தந்தை என்ற முறையில் எனக்கு அச்சமாக உள்ளது. உங்கள் நண்பர்கள் யாராவது தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் திருத்தப்பாருங்கள். நீங்கள் ஒருபோதும் தவறான பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். இந்த போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது, இளைஞர்களை அதிலிருந்து மீட்பதெல்லாம் அரசின் கடமை என சொல்லலாம். இப்போது ஆளும் அரசு அதை தவற விட்டுவிட்டார்கள் என்பதெல்லாம் நான் பேச வரவில்லை. அதற்கான மேடை இதில்லை. சில சமயம் அரசாங்கத்தை விட நம்முடைய வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நம்முடைய பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது. சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்று அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து "Say no to temporary pleasures, Say no to drugs" என அனைவரையும் விஜய் உறுதிமொழி எடுத்துக்கொள்ள செய்தார். பின்னர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ஆம் ஆண்டாக மாணவ, மாணவியர்களை கவுரவித்து மாணவ, மாணவியருக்கு வைர மோதிரம் மற்றும் 5,000 மதிப்பிலான காசோலையை விஜய் வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 day 12 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 4 days 7 hours ago |
ஜூசி சிக்கன்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-06-2024
30 Jun 2024 -
நடிகர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இல்லை : மதுரையில் திருமாவளவன் பேட்டி
30 Jun 2024மதுரை : த.வெ.க.
-
கர்நாடகாவில் பருவமழை தீவிரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு
30 Jun 2024சேலம் : கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
ஆப்கன் பெண்களின் உரிமைகள் என்பது உள்நாட்டு பிரச்சினை: தலிபான் அரசு
30 Jun 2024காபூல் : ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகள், தங்களது உள்நாட்டு பிரச்சினை என்று தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
-
நைஜீரியாவில் 3 இடங்களில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு
30 Jun 2024நைஜர் : நைஜீரியாவில் 3 இடங்களில் தற்கொலை படையை சேர்ந்த பெண்கள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலியானார்கள்.
-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது: அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
30 Jun 2024சென்னை : கடலூர் அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
30 Jun 2024சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
-
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
30 Jun 2024மாஸ்கோ : ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
உலகக்கோப்பையை வென்ற இந்தியா: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Jun 2024புதுடெல்லி : உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்
30 Jun 2024சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தி உள்ளார்.
-
விடுமுறை நாள்: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
30 Jun 2024தூத்துக்குடி : நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த
-
உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Jun 2024சென்னை : 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது. ஏற்கனவே 2007
-
யாருக்கும் பெரும்பான்மை இல்லை: ஈரான் அதிபர் தேர்தல்: வரும் 5-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவு
30 Jun 2024துபாய் : ஈரான் அதிபர் தேர்தலில் முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடக்க உள்ளது.
-
இன்று முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
30 Jun 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் நிறைவு பெற்றது
30 Jun 2024சென்னை : பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் முத்தமிழ் மாநாடு நடைபெறுவதையொட்டி ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
-
பாராளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: அனுராக் தாக்கூர்
30 Jun 2024சிம்லா : எதிர்க்கட்சியினர் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஓடுவதை விட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.
-
இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
30 Jun 2024புதுடெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார்
-
பொது சேவை செய்ய தர்மம்தான் எனக்கு வழிகாட்டுகிறது: ரிஷி சுனக்
30 Jun 2024லண்டன் : பொது சேவை செய்ய தர்மம் தான் எனக்கு வழிகாட்டுகிறது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
-
தேச நலனுக்காக பிரதமர் மோடி பணியாற்றுகிறார் : சிவராஜ் சிங் சவுகான் புகழாரம்
30 Jun 2024புதுடெல்லி : பிரதமர் மோடி தேசத்தின் நலனுக்காக பணியாற்றுகிறார். மேலும் எங்களை ஊக்குவிக்கிறார் என்று மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.
-
புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பதவியேற்றார்
30 Jun 2024புதுடெல்லி : ராணுவ தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நேற்று
-
தீபாவளி பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்
30 Jun 2024சென்னை : தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் அக்டோபர் 28-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
-
கேரளாவில் கனமழை: கபினி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள்
30 Jun 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து கபினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மறுகரைக்க
-
வெம்பக்கோட்டையில் அகழ்வாய்வு: பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
30 Jun 2024விருதுநகர் : வெம்பக்கோட்டையில் நடந்த 3-ம் கட்ட அகழ்வாய்வில் 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு வலியுறுத்தல்
30 Jun 2024சென்னை : தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர்
30 Jun 2024சென்னை : நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.