முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      இந்தியா
MODI 2023 04 30

Source: provided

புதுடெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார். 

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது. இதில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்குள் கால் பதித்தன.

இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரிட்ஜ்டவுனில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 147 ரன்களுடன் வெற்றியை நெருங்கியது. அந்த பரபரப்பான கட்டத்தில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் துல்லியமாக பந்து வீசி தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுகளை வீழ்த்தி தடம்புரள வைத்தனர்.

குறிப்பாக கிளாசென் (52 ரன்) வீழ்ந்ததும் வெற்றி வாய்ப்பு இந்தியா பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் அவர்களுக்கு 16 ரன் தேவைப்பட்ட போது, ஹர்திக் பாண்ட்யா 8 ரன் மட்டுமே வழங்கி இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தார். 

தென்ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்னில் பணிந்தது. இதனால் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா 2-வது முறையாக கோப்பையை வென்றது. மகுடம் சூடியதும் ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர். இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். 

இந்த நிலையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், டி 20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது  அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ரோகித் சர்மா, இறுதிப்போட்டியில் அரைசதம் விளாசிய விராட் கோலிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 

மேலும் கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, அற்புதமாக கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவையும் பிரதமர் மோடி பாராட்டினார். தொடர்ந்து  இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ராகுல் டிராவிட்டுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி விராட் கோலியிடம் பேசியதாவது:-  உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறுதிப்போட்டியில் உங்களது பேட்டிங்கை அற்புதமாக நங்கூரமிட்டுள்ளீர்கள். 

விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் பிரகாசித்திருக்கிறீர்கள். டி20 கிரிக்கெட் உங்களை மிஸ் செய்யும், ஆனால் நீங்கள் தொடர்ந்து புதிய தலைமுறை வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

ரோகித் சர்மாவிடம் பிரதமர் மோடி பேசுகையில்,  நீங்கள் சிறந்த ஆளுமை கொண்டவர். உங்களின் அமைதியான மனநிலை, பேட்டிங் மற்றும் கேப்டன்சிப் ஆகியவை இந்திய அணிக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. 

உங்கள் டி20 வாழ்க்கை அன்புடன் நினைவில் இருக்கும்.   உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து