எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Neeraj-Chopra 2023-09-01](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/08/Neeraj-Chopra_2023-09-01.jpg?itok=cDE0TsGP)
Source: provided
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் ஆக்கி அணி மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகள் டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக வெளிநாட்டில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), நிஜாத் ஜரீன் (குத்துச்சண்டை) ஆகியோர் ஆன்லைன் மூலம் பிரதமருடன் உரையாடினார்கள்.
இதில் இந்திய தடகள அணியின் தலைவர் நீரஜ் சோப்ரா ஆன்-லைன் மூலம் உரையாடுகையில் 'டோக்கியோ ஒலிம்பிக் போட்டியே எனது முதல் ஒலிம்பிக் ஆகும். அதில் எனக்கு தித்திப்பான முடிவே கிடைத்தது. நான் நாட்டுக்காக தங்கம் வென்றேன். அப்போது என் மனதில் எந்த பயமும் இல்லை. எனக்கு தன்னம்பிக்கை அதிகம் இருந்தது. ஏனெனில் நான் நன்றாக பயிற்சி எடுத்திருந்தேன். நான் அனைத்து வீரர்களுக்கும் சொல்வது என்னவென்றால் யாரை கண்டும், எதனை நினைத்தும் பயப்படாதீர்கள். நாம் அனைவரும் நீண்ட காலமாக வீட்டை மறந்து கடினமாக பயற்சி எடுத்து வருகிறோம். அதனால் நம்மால் முடியாதது என்று எதுவும் கிடையாது' என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
___________________________________________________________________________________
காலிறுதியில் லோரென்சோ
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, பிரான்சின் ஜியோவானி எம்பெட்ஷி பெரிகார்ட் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த லோரென்சோ முசெட்டி, ஆட்டத்தின் அடுத்தடுத்த செட்களை 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் லோரென்சோ முசெட்டி 4-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜியோவானி எம்பெட்ஷி பெரிகார்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
___________________________________________________________________________________
அபிஷேக் சர்மாவுக்கு வாழ்த்து
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 100 ரன்னும், கெய்க்வாட் 77 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 235 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டி முடிந்த கையோடு அபிஷேக் சர்மா, தனது ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான யுவராஜ் சிங்குடன் வீடியோ கால் வாயிலாக உரையாடினார். அப்போது சதம் அடித்து அசத்திய அபிஷேக் சர்மாவிற்கு யுவராஜ் சிங் வாழ்த்து கூறினார். அபிஷேக் சர்மாவிடம் யுவராஜ் சிங் கூறியதாவது, "உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் அதற்கு தகுதியானவர். இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். இன்னும் பல வர உள்ளன" என கூறினார்.
___________________________________________________________________________________
ரோகித், கோலிக்கு எவ்வளவு?
பிசிசிஐ அறிவித்த ரூ.125 கோடியில் யார் யாருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்ற விவரம் வெளியாகியிருக்கிறது. இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதன்படி, கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோருக்கும் இதே பரிசுத்தொகைதான் கிடைக்கும்.
அதேபோல் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2.5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா 2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாகப் பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் வழங்கப்படவுள்ளது.
___________________________________________________________________________________
தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். எனவே இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான மார்கோ யான்செனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெட்டிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி எங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வெர்ரின்னே.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கடாய் பன்னீர்![]() 2 days 12 hours ago |
சூப்பர் ஸ்நாக்ஸ்![]() 5 days 12 hours ago |
கிரிஸ்பி பிரட் எக் ரோல்![]() 1 week 2 days ago |
-
நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்க வேண்டும் : அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Jul 2024சென்னை : நிபா வைரஸ் தொற்று நோய் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு
22 Jul 2024சென்னை : முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.
-
இன்று முதல் ஆக.14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து : தெற்கு ரெயில்வே அறிவிப்பு
22 Jul 2024சென்னை : தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தினந்தோறும் வெளியாகும் புது தகவல்களால் பரபரப்பு
22 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்வோம்
-
மக்களவையில் நீட் முறைகேடு தொடர்பாக முதல் நாளிலேயே எதிர்க்கட்சியினர் மத்திய அரசு இடைய கடும் விவாதம்
22 Jul 2024புதுடெல்லி, பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல்
22 Jul 2024சென்னை : சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை
22 Jul 2024காசா : இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
-
அடுத்த மாதம் வெளியாகிறது 'ஜமா'
22 Jul 2024பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் 'ஜமா'
-
அமெரிக்கா: இந்திய மாணவி பலி
22 Jul 2024வாஷிங்டன் : ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தனலி பகுதியை சேர்ந்தவர் ஜித்தி ஹரிகா (வயது 25).
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-07-2024.
22 Jul 2024 -
விடுதலை-2 பர்ஸ்ட் லுக் வெளியீடு
22 Jul 2024ஆர்.எஸ்.
-
அமெரிக்கா: நைட் கிளப்பில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
22 Jul 2024அமெரிக்கா : அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் மர்ம நண்பர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரம்
22 Jul 2024சென்னை : கேரளத்தில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பரவல் காரணமாக தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
பார்லி.யை மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்துவோம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை
22 Jul 2024புதுடெல்லி, நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாராளுமன்றத்தை பயன்படுத்துவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைவரின் ஒத்த
-
நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்
22 Jul 2024கரூர் : கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, அ.தி.மு.க.
-
கன்வார் யாத்திரை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் தீர்மான நோட்டீஸ்கள் நிராகரிப்பு
22 Jul 2024புதுடெல்லி : கன்வார் யாத்திரை விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் தீர்மான நோட்டீஸ்கள் மாநிலங்களவையில் நிராகரிப்பட்டது.
-
வங்கதேசத்திலிருந்து மேலும் 77 தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்
22 Jul 2024சென்னை : முதல் கட்டமாக 49 மாணவர்கள் வங்கதேசத்திலிருந்து தமிழகம் அழைத்துவரப்பட்ட நிலையில் மேலும் 77 மாணவர்கள் சென்னை திரும்பினர்.
-
இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது : தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்
22 Jul 2024புதுடெல்லி : இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை என்று தெரிவித்துள்ள இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் , இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாக அ
-
செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 24-க்கு விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
22 Jul 2024சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
-
தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை : மத்திய அமைச்சர் தகவல்
22 Jul 2024புதுடெல்லி : தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மத்திய அரசு மேம்படுத்த பாடுபட்டு வருகிறது என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்து
-
ஜோ பைடன், மோடி உள்ளிட்ட தலைவர்களின் ஏ.ஐ.பேஷன் ஷோ வீடியோ வெளியிட்ட எலான் மஸ்க்
22 Jul 2024நியூயார்க் : பைடன், மோடி உள்ளிட்ட தலைவர்களின் ஏ.ஐ. பேஷன் ஷோ வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
Soapera காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்ட இளையராஜா
22 Jul 2024சென்னை: 17 ஜுலை 2024: நம் நாட்டின் பொக்கிஷமான ஆயுர்வேதமும், இசையும் கொண்டிருக்கும் மகத்தான குணமாக்கும் ஆற்றலை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத தனிநப
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
22 Jul 2024சென்னை : சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 6 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளத
-
அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு
22 Jul 2024வாஷிங்டன் : ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா? - பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: தொடர்ந்து 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
22 Jul 2024புதுடெல்லி : பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 7-வது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.