முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞருக்கு நாணயம் வெளியிட்டதுதான் தி.மு.க.அரசின் மூன்றாண்டு கால சாதனை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சனம்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      தமிழகம்
SR 2024 08 19

Source: provided

மதுரை : கலைஞருக்கு நாணயம் வெளியிட்டது தான் தி.மு.க.அரசின் மூன்றாண்டு கால சாதனை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மதுரை மாநகர் மாவட்ட  தெற்கு 1-ம் பகுதி, தெற்கு 2-ம் பகுதி அதிமுக சார்பில் பகுதி செயலாளர்கள்  எம்.எஸ்.செந்தில்குமார், கே.கலைசெல்வம் ஆகியோர் தலைமையில் இஸ்மாயில்புரம் 12-வது தெருவில் நடைபெற்ற புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.வழங்கினார். இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாதுரை, பா.குமார், ஏ.பார்த்திபன், வி.பி.ஆர்.செல்வகுமார், கவுன்சிலர் ரூபினி குமார், ஜோசப்தனில்லாஸ், விநாயகமூர்த்தி, கறிக்கடை முத்துகிருஷ்ணன், நூர்முகமது, முருகன், மலர்விழி, கார்மேகம், கோட்டை சாமி, மைதீன், ஷோபியா, ஜாகீர் உசேன், வி.கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது-

கடந்த அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒரு தொழிற்சாலை தற்போது வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. தற்போது மீண்டும் முதலமைச்சர் வெளிநாடு செல்வது இன்ப சுற்றுலாவா அல்லது தொழில் முதலீட்டை ஈர்க்கவா அல்லது தங்கள் கொள்ளை அடித்த பணத்தை  தொழில் முதலீட்டில் சேர்க்கவா என்பது தெரியவில்லை.இந்த ஆட்சியின் மீது மக்கள் கோபத்துடன் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்காக ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டு வரும் பருப்பு பாமாயில் ஆகியவற்றை நிறுத்திவிட்டனர்.தமிழகத்தில் 2 கோடி 21 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது.

இதில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் அரிசி, பாமாயில், எண்ணெய் ஆகியவற்றை வாங்குகின்றார்கள் வெளிச்சந்தையில் ஒரு கிலோ பருப்பு 185 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, பாமாயில் ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ஆனால் ரேஷன் கடையில் மூலம் ஒரு கிலோ பருப்பு 30 ரூபாய்க்கும்,ஒரு லிட்டர் எண்ணெய் 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 3,800 கோடி மானியமாக ஒதுக்கப்படும் இதற்காக மாதம் தோறும் 20 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம்பருப்பு, ஒரு கோடிய 90 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டது  கடந்த அம்மா ஆட்சிக்காலத்திலும் சரி, எடப்பாடியார் ஆட்சிக்காலத்திலும் சரி ஒரு மாதம் கூட நிறுத்தி வைக்காமல் தொடர்ந்து மானியம் வழங்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது கடந்த நான்கு மாத காலமாக பருப்பும், எண்ணையும் வழங்கப்படவில்லை இது குறித்து கூட பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைகிணங்க மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து துறையின் அமைச்சர் விளக்கம் கொடுத்தார் ஆனால் அவர் சொல்வதற்கும் தற்போது நடைபெறுதற்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது.எம்.ஜி.ஆர். குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கினார்.அதனை தொடர்ந்து அம்மா 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கினார்.

அதனை தொடர்ந்து எடப்பாடியார் தொடர்ந்து இதை கடைப்பிடித்தார்.மேலும் மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த நிர்பந்தபடுத்தியும் அதை மக்கள் மீது சுமத்தாமல் அரசே பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் என்று கூறினார்.  ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்த திமுக அரசு மூன்று முறை மின் கட்டணத்தை  உயர்த்தி அதை மக்கள் தலையில் சுமத்தியுள்ளது.

அது மட்டுமல்லாது உயர் கல்வியில் மிகப்பெரிய புரட்சியை எடப்பாடியார் செய்தார்,  கடந்த 2021 திமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வி சேர்க்கை 25 சகவீதமாக இருந்தது அதனை தொடர்ந்து, அம்மா வழங்கிய மடிக்கணினி போன்ற திட்டங்களால் 45 சகவீதமாக உயர்ந்தது அதனை தொடர்ந்து எடப்பாடியார் அதை 51 சதவீதம் உயர்த்தி காட்டி காட்டினார். 

அதனைத் தொடர்ந்து 7.5 சகவீத இட ஒதுக்கீட்டினை கொண்டு வந்து இதன் மூலம் ஆண்டுதோறும் 665 அரசுபள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பை பயன்பெறும் வகையில்  தொலைநோக்குதிட்டத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார். தற்பொழுது எடப்பாடியார் கையெழத்துயிட்ட கழக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அட்டையை அனைவரும் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். தி.மு.க.அரசு அளித்த தேர்தல் வாக்குறிதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் மூன்றாண்டு கால தி.மு.க.ஆட்சியில் சாதனைசெய்ததாக கூறிவருகிறார்கள். முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நாணயம் வெளியிட்டது தான் தி.மு.க.அரசின் மூன்றாண்டு கால சாதனையாக பார்க்கிறேன்.

வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை மக்கள் வீட்டுக்கு அனுப்பி மீண்டும் எடப்பாடியாரை மக்கள் கோட்டையில் அமர்த்துவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.-

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து