முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை பெறும் நிர்வாகிகள் பிரச்சார பீரங்கிகளாக மாறி களப்பணியாற்ற வேண்டும் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேச்சு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      தமிழகம்
SR 2024-08-20

Source: provided

மதுரை : அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை பெறும் நிர்வாகிகள் பிரச்சார பீரங்கிகளாக மாறி களப்பணியாற்ற  வேண்டும் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மதுரை மாநகர் மாவட்ட  மேற்கு 5-ம் பகுதி அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் சோலைராஜா   தலைமையில் பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ எம்.எல்.ஏ.வழங்கினார்.

இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாதுரை, பா.குமார், பரவை ராஜா, ஏ.பார்த்திபன், வி.பி.ஆர்.செல்வகுமார், வக்கீல் தமிழ்செல்வன், கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, சோலை இளவரசன், துர்காஜெயராமன், மலர்விழி, பி.ஆர்.சி.திருமுருகன், பூக்கடை முருகன், வி.கே.எஸ்.ராஜா, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது-

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மத்தியில் யார் ஆட்சி செய்யவேண்டும் என்று வாக்களித்தனர். ஆனால் சட்டமன்ற தேர்தல் என்பது வேறு. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தி.மு.க.வை மக்கள் தூக்கிஏறிந்து விடுவார்கள். காரணம் மின்கட்டணம், எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள் நடமாட்டம் என அதிகரித்து வருகிறது. வீட்டு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் விலை ஏறி விட்டது. பெண்கள் தி.மு.க.ஆட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தி.மு.க. ஆட்சி இன்றைக்கு நடக்கிறது. தி.மு.க. ஒருமுறை ஆட்சி செய்தால் மற்றொரு முறை ஆட்சிக்கு வரமாட்டார்கள். கருணாநிதியாலே தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியாதபோது ஸ்டாலின் ஆல் முடியாது. விலைவாசி ஏற்றம், போதை புழக்கம் அதிகரித்து உள்ளதை கட்டுப்படுத்த முடியவில்லை, குறிப்பாக தி.மு.க. கட்சிக்காரர்களை அடக்கவே முடியாமல் திணறுவதாக  தெரிவித்தார்.மேலும் தான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறினார் என்ன ஆனது.தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வதாக தி.மு.க. அரசு சொன்னாலும் கட்சிக்காரர்களை சமாளிக்க முடியாமல் சிகிச்சை பெறவை அமெரிக்கா செல்கிறார்.

முதலீட்டை ஈர்த்தது குறித்து வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளாராகளா.?10 லட்ச கோடி ஈர்த்து உள்ளார்கள் என்று சொல்லி வருகிறார்கள் அதன் விவரங்கள் இதுவரை கொடுக்கவில்லை. அமைச்சர்கள் அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கி திணறுகின்றனர். ஏழை மக்களின் கற்பக விருச்சம் அதிமுக தொண்டனும் முதல்வர் ஆகலாம். உரிமை சீட்டு வார்டு செயலாளர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுக்க வேண்டும், தவறினால் தண்டிக்க படுவார்கள்.

இந்த புதிய அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைளை பெறுகிற நீங்கள் பிரச்சார பீரங்கிகளாக மாறி களப்பணியாற்ற வேண்டும்.எனவேதான் வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு நல்ல பாடம் புகட்டி எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து