எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி நடக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து இந்த தொகுதிக்கு கடந்த மாதம் 7-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 10, 13, 17-ம் தேதிகளில் 3 நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 8 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து 20-ம் தேதி நள்ளிரவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. இதையடுத்து வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி கட்சியின் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இதனிடையே பரபரப்பாக நடந்து வந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் மொத்தம் 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு தயாராக வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய 97 வகையான பொருட்களும் இன்று காலையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தேர்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வரும் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை ஒட்டி பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் வந்தனர். வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, வாக்குச்சாவடிகளுக்கு லாரி ஒன்றில் ஓட்டு எந்திரம் எடுத்துச் செல்லப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: அவரச வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு
03 Feb 2025மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
-
மேகாலயா, அருணாச்சலில் மிதமான நிலநடுக்கம்
03 Feb 2025ஷில்லாங் : மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்து முன்னணி போராட்டம்: மதுரையில் இன்றும் 144 தடை
03 Feb 2025மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
-
தி.மு.க. மாணவர் அணி சார்பில் டெல்லியில் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம்
03 Feb 2025சென்னை : வருகிற 6-ம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
ஏ.டி.ஜி.பி.யின் உயிருக்கு ஆபத்தா? - தமிழ்நாடு டி.ஜி.பி. ஜிவால் மறுப்பு
03 Feb 2025சென்னை : ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் எவ்வித சதி திட்டமும் இல்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதி திட்டமும் இல்லை
-
சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: டை பிரேக்கர் முறையில் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்
03 Feb 2025விஜ்க் ஆன் ஜீ : நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், சக நாட்டு வீரர் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
-
அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்: துணை முதல்வர் உதயநிதி பதிவு
03 Feb 2025சென்னை : வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இனி இதுதான் எங்களது ஸ்டைல்: இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்
03 Feb 2025மும்பை : டி20 போட்டிகளை பொருத்தவரை இனி பேட்ஸ்மேன்களும் பந்து வீசுவார்கள்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் வசந்த பஞ்சமியில் புனித நீராடிய 62 லட்சத்துக்கும் அதிகமானோர்
03 Feb 2025பிரயாக்ராஜ் : கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமியை முன்னிட்டு நேற்று காலை நிலவரப்படி 62.25 லட்ச பக்தர்கள் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. மீது கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
03 Feb 2025புதுடெல்லி : தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், பா.ஜ.க. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ, அரசியல் கள
-
பிரக்ஞானந்தாவுக்கு துணை முதல்வர் வாழ்த்து
03 Feb 2025சென்னை : மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியா-இங்கிலாந்து தீவிரம்
03 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் பொருட்டு நடைபெறும் ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகள் தீவிர முனைப்புடன் களமிறங்க உள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-02-2025.
04 Feb 2025 -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு
03 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
அபிஷேக் புதிய மைல்கல்
03 Feb 2025இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நடைபெற்றது.
-
தமிழ்நாடு மீனவர்கள் கைதை தடுக்க தூதரக மூலம் நடவடிக்கை எடுங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
03 Feb 2025சென்னை : தமிழக மீனவர்கள் கைதை தடுக்க தூதரக மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
அதிக ரிஸ்க் எடுக்க விரும்புகிறோம்: தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்
03 Feb 2025மும்பை : டி20 போட்டிகளில் இந்திய அணி அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புவதாக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
-
தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் காயம்: வங்கதேச தொடரில் இடம்பெறுவாரா?
03 Feb 2025மும்பை : இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
04 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து விற்பனையானது.
-
காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை சுட்டு பிடித்த போலீசார்
03 Feb 2025ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
-
தமிழ்நாட்டில் ஒரு வாரம் வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
04 Feb 2025சென்னை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியின் பொய்கள் : வெளிநாட்டில் இந்தியாவின் மரியாதையை குலைக்கும் - ஜெய்சங்கர் கடும் விமர்சனம்
03 Feb 2025புதுடெல்லி : ராகுல் காந்தியின் பொய்கள் அரசியல் நோக்கத்திற்காக இருக்கலாம்.
-
ஜகபர் அலி கொலை வழக்கு; கைதானவர்களுக்கு 3 நாள் போலீஸ் காவல்: புதுக்கோட்டை நீதிமன்றம்
03 Feb 2025புதுக்கோட்டை : ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு மீனவர்கள் கைதை தடுக்க தூதரக மூலம் நடவடிக்கை எடுங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
03 Feb 2025சென்னை : தமிழக மீனவர்கள் கைதை தடுக்க தூதரக மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை: பா.ஜ.க, எம்.பி.க்கள் வலியுறுத்தல்
03 Feb 2025புதுடில்லி : ஜனாதிபதியை அவதூறாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க துணை ஜனாதிபதியிடம் பா.ஜ., எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.